News March 1, 2025
உச்சநீதிமன்றத்தை நாடிய சீமான்: மார்ச் 7ல் விசாரணை?

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயலெட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
Similar News
News March 1, 2025
SAவுக்கு 180 ரன்கள் இலக்கு

CT தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. கராச்சி மைதானத்தில் டாஸ் வென்ற ENG முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் SA வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ENG அணியினர் 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். அதிகபட்சமாக ரூட் 37, ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். SA தரப்பில் ஜான்சென், மல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
News March 1, 2025
ஸ்ரேயா கோஷல் X தள பக்கம் முடக்கம்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் X தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிப்ரவரி 13ஆம் தேதி முதலே தனது X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரிலுள்ள அந்த கணக்கில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 1, 2025
கோவிந்தாவுடன் டைவர்சா? மனைவி விளக்கம்

பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து சுனிதா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அரசியலில் கோவிந்தா இருப்பதாகவும், இதனால் தனிப்பட்ட வாழ்க்கை,, அரசியலுக்கு என தனித்தனி வீடு இருப்பதாகவும், இதை வைத்து விவாகரத்து என எப்படி கூறலாம் என அவர் கூறியுள்ளார். 2 பேரையும் பிரிக்க யாராலும் முடியாது என்றும் சுனிதா தெரிவித்துள்ளார்.