News September 27, 2025
ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்: ஜெயக்குமார்

மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான் உள்ளார் என்றும் மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சீமானுக்கு மறை கழன்றுவிட்டதாகவும் சைகை காண்பித்து அவர் விமர்சித்தார்.
Similar News
News January 9, 2026
காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.
News January 9, 2026
கனமழை: 14 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

நாளை சனிக்கிழமை என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கும். இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், மாணவர்கள் குடை, ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.
News January 9, 2026
துணை முதல்வராவார் பிரேமலதா: சுதீஷ் ஆருடம்

பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். கடலூர் தேமுதிக மாநாட்டில் பேசிய அவர், விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் எனக் குறிப்பிட்டார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக பேசிய அவர், 10, 15 சீட்களுக்காக தேமுதிக இல்லை எனவும் கூறினார்.


