News April 16, 2025
சீமான் வழக்கு – ‘வீடியோவை பார்த்த பின் உத்தரவு’

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
Similar News
News October 31, 2025
உலகளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலக வன வள மதிப்பீடு 2025-ன் படி, இந்தியா உலகளவில், 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது வனப்பகுதியைப் பாதுகாக்கும் இந்தியாவின் உறுதியைக் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஆண்டுதோறும் வனப்பரப்பை விரிவுபடுத்துவதில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த வனப்பகுதி 1,797 லட்சம் ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக வனப்பகுதியில் சுமார் 2% ஆகும்.
News October 31, 2025
அரசு பஸ் கோர விபத்து.. பள்ளி மாணவர்களுக்கு சோகம்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே நடந்த இந்த விபத்தில், ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 11 பேர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.
News October 31, 2025
வான் ஆதிக்கத்தை பலப்படுத்த புதிய ஏவுகணைகள்

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


