News February 27, 2025
சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 27, 2025
வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை

<<15597388>>சீமான் <<>>மீது நடிகை அளித்த பாலியல் புகார் விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளிக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட காவலாளி கைதாகியுள்ள சூழலில், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சென்னை நீலாங்கரை வீட்டில், வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி கயல்விழி ஆலோசித்து வருகிறார்.
News February 27, 2025
மார்ச் மாதப் பலன்: தன யோகம் கிடைக்கும் 4 ராசிகள்

மார்ச்சில் மீன ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, ராகு என 6 கிரகங்களின் சேர்க்கை நடப்பதால்: மேஷம்- 2வது வாரம் வரை சிறப்பாக இருக்கும் *மேஷம்- மாத நடுவில் அதிர்ஷ்டம் திரும்பும், சுயக்கட்டுப்பாடு அவசியம் *ரிஷபம்- வாய்ப்புகள் தேடிவரும், உறவுகள் சிறக்கும். பிற்பாதியில் ஏற்ற இறக்கம் *மிதுனம்- உறவுகள், பண விஷயத்தில் கவனம் தேவை, 2-ம் வாரத்தில் பண ஆதாயம் உண்டு. மாத இறுதியில் கவனம் தேவை.
News February 27, 2025
தமிழ்ல எழுதிட்டா அது தமிழ் ஆயிடுமா?

முன்பெல்லாம் ரயில்களுக்கு ‘வைகை exp’, ’பாண்டியன் exp’ என்று பெயரிடுவார்கள். இப்போது பாருங்கள். அந்த்யோதயா, சதாப்தி என்று இந்திப் பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன. அதேபோல, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ‘ஜன் அவுஷாதி’ என்று ஏதோ புரியாத மொழியிலேயே வருகின்றன. அதேபோல, இந்திப் பெயர்களை தமிழ் எழுத்துக்களால் எழுதினால் அது தமிழாகிவிடுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.