News March 16, 2024
டிரோன் மூலம் பாதுகாப்புப் பணி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எல்லைகளில் டிரோன்கள் மூலம் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கரன்சிகள், போதைப் பொருட்கள் ஊடுருவலை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றார். மேலும், பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகமும் தடுக்கப்படும் எனக் கூறினார்.
Similar News
News July 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 392 ▶குறள்: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ▶ பொருள்: எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டினையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லுவார்கள்.
News July 11, 2025
இலவசங்கள் கிடையாது: முதல்வர் விஜய் என டிரெய்லர்

யாதும் அறியான் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.கோபி இயக்கியிருக்கிறார். இதன் டிரெய்லரில் விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போன்றும், இனி இலவசம் கிடையாது என உத்தரவிட்டது போன்றும் காட்சிகள் இருந்தன. இது வைரலானதால், இது குறித்து பேசிய கோபி, தான் விஜய் ரசிகன் என்றும், ஆனால் இந்த காட்சிகள் முழுக்க முழுக்க கற்பனைக்காக வைக்கப்பட்டவை என விளக்கமளித்தார்.
News July 11, 2025
அறுபடை வீட்டையும் சேகர்பாபு அழித்துவிடுவார்: எச்.ராஜா

சேகர்பாபு அறுபடை வீட்டையும் அழித்துவிடுவார் என எச்.ராஜா விமர்சித்தார். இது குறித்து அவர் பேசுகையில், சுவாமிமலையில் கட்டப்படாத மின்தூக்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக சேகர்பாபு பொய் சொன்னதாக குற்றம் தெரிவித்தார். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர், அது உயர்கல்வித்துறை அமைச்சரின் வேலை, சேகர்பாபுவுக்கு அதில் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பினார்.