News March 16, 2024
டிரோன் மூலம் பாதுகாப்புப் பணி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எல்லைகளில் டிரோன்கள் மூலம் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கரன்சிகள், போதைப் பொருட்கள் ஊடுருவலை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றார். மேலும், பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகமும் தடுக்கப்படும் எனக் கூறினார்.
Similar News
News September 1, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
பெற்றோர்களே உஷார்! Digital Dementia தெரியுமா?

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே Digital Dementia என்று வரையறுக்கின்றனர். ஞாபக சக்தி இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் focus செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் மாறுவார்களாம். SHARE IT!
News September 1, 2025
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ-க்கு மதுரை கோர்ட் பாராட்டு தெரிவித்திருந்தது. ஆனால், புதிய திருப்பமாக குற்றப்பத்திரிகையை கோர்ட் இன்று திருப்பி அனுப்பியுள்ளது. பல குறைகள் இருப்பதால் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியுள்ளதாம். குறுகிய காலத்தில் தாக்கல் செய்ததால் குறையா (அ) தகவல்கள் மறைக்கப்படுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.