News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News November 7, 2025

பாஜக அழைப்பு விடுத்தது: செங்கோட்டையன் பரபரப்பு

image

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

USA Passport-களில் இனி ஆண், பெண் மட்டுமே!

image

அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று, USA Passport-களில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிட முடியும் என்ற உத்தரவு. இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க USA உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் திருநங்கைகள், மற்றும் பிற பாலின மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

News November 7, 2025

அதிமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்தேன்: வைகோ

image

2011-ல் கூட்டணி விவகாரத்தில் OPS செய்த தவறுக்கு தான், தற்போது அவர் பலனை அனுபவித்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார். மதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2011-ல் மதிமுகவுக்கு 12 இடங்களை மட்டுமே தருவதாக இருந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணிக்கு தயாராக இல்லை என்று OPS பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!