News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 29, 2026
2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சரத்குமார்

2026 தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தான் போட்டியிடாதபோது தனது மனைவி ராதிகாவும் போட்டியிடமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னுடன் பயணிக்கும் கடின உழைப்பாளிகளுக்கு 5 இடங்களையாவது பெற்றுத் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 2024 மக்களவை தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
News January 29, 2026
தேமுதிகவின் கூட்டணி உறுதியானதா?

தேமுதிகவின் கூட்டணி கணக்கு ஒருவழியாக சால்வ் ஆனதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக, தேமுதிக கேட்டதாக சொல்லப்படும் 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை அதிமுக கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக பக்கம் ரகசிய பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்க, 6 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் என்ற முடிவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறதாம். இதுபற்றி பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 29, 2026
தேசிய செய்தித்தாள் தினம் இன்று!

இன்று தேசிய செய்தித்தாள் தினம். 1780-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதல்முறையாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ செய்தித்தாள் அச்சிடப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் செய்தித்தாள்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் விதமாக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்று செய்தித்தாளாக இருந்தவை இன்று, Short News App-களாக மாறியுள்ளன. காலங்கள் ஓட, வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளன, வீரியம் எப்போதும் ஒன்றே!


