News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News December 19, 2025
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன் PHOTO

கர்நாடகாவில் கல்லூரி மாணவியை அவரது காதலனே நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடுமை நடந்துள்ளது. காதலன் விகாஸ், மாணவியுடன் நெருக்கமாக இருந்ததை அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இதனை வைத்து மிரட்டி, விகாஸ், அவரது நண்பர்கள் சேத்தன், பிரசாந்த் ஆகியோர் அந்த மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களே உஷார்!
News December 19, 2025
தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

SIR-க்கு பிறகு தமிழகத்தில் 97.37 (9,37,832) லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக, 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்கு பிறகு 5.43 கோடி (5,43,76,755) வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, 2.66 கோடி (2,66,63,233) ஆண், 2.77 கோடி பெண் (2,77,60,332) & 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
News December 19, 2025
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி.. 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 35 மாவட்டங்களில் சுமார் <<18614072>>94 லட்சம்<<>> வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியானால் 1 கோடியை எட்டுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது . சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் மாவட்டங்கள் மட்டுமின்றி, சிறிய மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


