News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News December 1, 2025
ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News December 1, 2025
அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!


