News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 28, 2026
கூட்டணி முடிவு.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ், ராமதாஸ் தரப்பு பாமக, சீமானுடன் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், கூட்டணி விஷயம் தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய், ஆதாரமற்றவை என தவெகவின் துணை பொ.செ., ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனவும், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News January 28, 2026
தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <
News January 28, 2026
சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.


