News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 18, 2026
FLASH: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலாளர் அரிமா சேகர், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருடன் திமுக பிரமுகர் காரத்தே M.P.சுதர்சன், வேளச்சேரி பகுதி இலக்கிய அணிச் செயலாளர் சேகர், வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் விநாயகம் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால் மாற்றுக் கட்சியினரை இழுக்கும் பணியில் திமுக, அதிமுக போட்டி போட்டு செய்து வருகின்றன.
News January 18, 2026
‘கைதி 2’ தற்போதைய நிலைமை என்ன? கார்த்தி ரியாக்ஷன்!

கடந்த டிசம்பரில் ‘கைதி 2’ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கூலி’ பட விமர்சனங்களை தொடர்ந்து, படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. தற்போது அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கைதி 2’ படம் பற்றிய கேள்விக்கு, ‘இதைப்பற்றி லோகேஷ் சொல்வார்’ என கார்த்தி பதிலளித்துள்ளார். இதனால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ‘கைதி’ ரசிகர்கள்.
News January 18, 2026
ஓசூர் ஏர்போர்ட் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு

ஓசூரில் ஏர்போர்ட் கட்டுவதற்கான TN அரசின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்(HAL) நிறுவனத்தின் பயிற்சிக்காக பாதுகாப்புத்துறை அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூளகிரி அருகே பேரிகை மற்றும் பாகலூர் இடையே 2,300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏர்போர்ட் அமைக்க அறிக்கை தயார் செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


