News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News February 2, 2026

தேர்தல் நாடகத்தில் கூட TN-ஐ சேர்க்காத பாஜக: ரகுபதி

image

தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட TN என்றால் பாஜக புறக்கணிக்கிறது என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். எவ்வளவு அறிவிப்புகளை செய்தாலும் இங்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் TN புறக்கணிக்கப்படுள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுக்கு தேர்தலில் TN மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

News February 2, 2026

சரிவில் இருந்து மீண்ட ரூபாய்!

image

டாலருக்கு எதிராக கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வந்த ரூபாய் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான வர்த்தகத்தில், 42 பைசா உயர்ந்து ₹91.53-ஆக உள்ள பாயின் மதிப்பு உள்ளது. RBI-ன் அறிவுறுத்தலின் பேரில் பொதுத்துறை வங்கிகள் டாலர்களை விற்றதன் மூலம் இது மீண்டது. மேலும், கடந்த 6 வாரங்களில் இத்தகைய குறிப்பிடத்தக்க உயர்வு ஒரே நாளில் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

News February 2, 2026

சீனா ஆக்கிரமிப்பை பற்றி பேச ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

image

இந்தியாவின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி பார்லிமெண்ட்டில் குற்றஞ்சாட்டினார். ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி MM நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை மேற்கோள்காட்டி ராகுல் பேச, வெளியிடப்படாத புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பேசக் கூடாதென சபாநாயகர் அனுமதி மறுத்தார். அத்துடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!