News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News December 13, 2025
வானம் விட்டு வந்த வெண்ணிலவே கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், காலை நேர பனியாக சேலை, இதயம் பேச மறந்த வார்த்தையாக கம்மல், காற்றில் மிதக்கும் காதலாக கூந்தல், மலர்ந்த தாமரையாக முகம் என நடக்கும் கவிதையாக எழுதப்பட்டிருக்கிறார். வானம் விட்டு வந்த வெண்ணிலவு போல, சத்தமில்லாமல் பாடும் ராகமாக இருக்கிறார். உங்களுக்கும் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 13, 2025
சியா விதைகளை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

ஆரோக்கியமான உணவுகளில் தவறாமல் இடம்பெறுவது சியா விதைகள். நன்மைகள் அதிகம் என்றாலும் அளவை மிஞ்சினால் பக்க விளைவுகளும் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். *அதிக நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை (வயிறு வலி, வீக்கம்) ஏற்படுத்தும் *விதைகள் உணவுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் *BP-யை குறைப்பதால், ஏற்கெனவே Low BP இருப்பவர்களுக்கு தலைசுற்றல் ஏற்படுத்தும் *சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
News December 13, 2025
வெற்றி பெற்றார் கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி, 45 ஆண்டுகால CPM – LDF கூட்டணி தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி, திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக<<>> கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்ட BJP வேட்பாளரும், கேரளாவின் முதல் IPS அதிகாரியுமான ஸ்ரீலேகா, CPM வேட்பாளர் அம்ரிதாவை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார். இவரே திருவனந்தபுரம் மேயராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.


