News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News December 16, 2025
குமரி: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த <
News December 16, 2025
இன்று முதல் திருச்சி-சென்னை AIRBUS சேவை

இன்று முதல் டிச.31 வரை திருச்சி-சென்னை இடையிலான ATR விமான சேவைகளை Indigo ரத்து செய்துள்ளது. 76 இருக்கை வசதி கொண்ட ATR விமான சேவைக்கு பதில், காலை 10:35, மாலை 5:55 என 2 நேரங்களில் AIRBUS இயக்கப்படவுள்ளது. இந்த AIRBUS-ல் அதிகபட்சமாக 180 பேர் பயணிக்க முடியும். கிறிஸ்துமஸ், New Year பண்டிகை கால விடுமுறையை கணக்கிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த தற்காலிக மாற்றத்தை செய்துள்ளதாக Indigo கூறியுள்ளது.
News December 16, 2025
டிச.27-ல் நாதக பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான தமிழக அரசியல் களத்தில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு என இயங்கி வருகின்றன. ஆனால், ஒரு படி மேலாக சென்ற சீமான், 100 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டிருந்தார். இந்நிலையில், டிச.27-ல் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் அரங்கில் நாதக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.


