News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 30, 2026
நான் கொச்சைப்படுத்தவில்லை: மா.சு விளக்கம்

தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் கோரி போராடுவது ‘பேஷன்’ ஆகிவிட்டது என அமைச்சர் மா.சு., கூறியதற்கு <<19000579>>அண்ணாமலை <<>>கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டங்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தவில்லை என மா.சு விளக்கமளித்துள்ளார். போராட்டம் என்பது இயல்பாக நடக்க வேண்டும்; சிலர் தூண்டுதலால் நடக்க கூடாது; தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி மக்கள் ஊர்களுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் உடனே டிக்கெட்களை முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள்! SHARE IT.
News January 30, 2026
காங்.,க்கும் திருப்பி அடிக்க தெரியும்: மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் மீது மதுரை வடக்கு தொகுதி <<18969847>>திமுக MLA தளபதி<<>> வைத்த விமர்சனத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியை திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறுவது குறித்து கார்கேவிடம் வலியுறுத்தியதாகவும், காங்கிரஸுக்கும் திருப்பி அடிக்க தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தியவர்களிடம் தயவுதாட்சண்யம் பார்ப்பதில்லை எனவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.


