News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News February 24, 2026

TN ELECTION: தேர்தல் அதிகாரி அறிவித்தார்

image

தமிழக தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, தலைநகர் சென்னையில் தேர்தல் பணிகளை வேகப்படுத்த 8 கண்காணிப்பு அதிகாரிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நியமித்துள்ளார். மொத்தமுள்ள 16 தொகுதிகளை கணக்கில் கொண்டு, 2 தொகுதிகளுக்கு 1 அதிகாரி வீதம் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

News February 24, 2026

ஒரே நாளில் 2 முறை திருமணம் செய்யும் VD – ரஷ்மிகா ஜோடி

image

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம் வரும் 26-ம் தேதி உதய்பூரில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெறுகிறது. காலை தெலுங்கு சடங்குகளின்படியும், மாலை கொடுவா (கர்நாடகா) சடங்குகளின்படியும், 2 முறை திருமணம் நடைபெற உள்ளது. பின்னர், மார்ச் 3-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்கும் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறகிறது.

News February 24, 2026

இளைஞர்களுக்கு மாதம் ₹2,000.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

தேர்தலையொட்டி DMK, ADMK புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS கூறியிருந்தார். இந்நிலையில், டிகிரி படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் EPS வாக்குறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!