News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News December 3, 2025
இதுபோன்ற விசித்திரமான இடங்கள் தெரியுமா?

இந்தியாவில் சில இடங்கள், சில நேரங்களில் அசாதாரணமாக தோன்றுகின்றன. பெரும்பாலும், மக்கள் வாழும் விதம், பழமையான பழக்கவழக்கங்கள், இயற்கை அதிசயங்கள், விசித்திரமான நிகழ்வுகள் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? மேலே உங்களுக்காக சில விசித்திரமான இடங்களை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
News December 3, 2025
வணிகர்கள் 4 மாதங்கள் ₹500 கட்டணமின்றி பதிவு செய்யலாம்

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்த உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ம் தேதி வரை, நிரந்தர உறுப்பினராவதற்கு ₹500 கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாமல், வருடத்திற்கு ₹40 லட்சம் வரை விற்றுமுதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


