News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News March 1, 2026
அன்புமணிக்கு எத்தனை சீட்? அதிமுக எடுத்த முடிவு

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவுள்ளது. மதுரையில் இன்று NDA மாநாடு நடைபெறும் நிலையில், தனியார் ஹோட்டலில் EPS மற்றும் அன்புமணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 சட்டமன்ற தொகுதிகள் + 1 ராஜ்ய சபா சீட்டை அன்புமணி கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
News March 1, 2026
முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்: PM மோடி

நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், டெல்லி AI மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் INC என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் என அர்த்தம், தற்போது அது முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக(MMC) மாறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேசப் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் பாணிலேயே காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 1, 2026
கொமேனி இறந்தாலும் தாக்குதல் தொடரும்: டிரம்ப்

மிகவும் தீய மனிதரான கொமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது ஈரான் மக்களுக்கு கிடைத்த நீதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கானது என்று SM-ல் அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஈரான் ராணுவம், போலீஸ் உள்ளிட்டோர் மக்களுடன் இணைந்து ஈரானின் நலனுக்கு ஒருசேர உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளார்.


