News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 5, 2026
PM மோடி உரை.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ்யசபாவில் PM மோடி உரையின் போது முழக்கமிட்ட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி MP-க்கள் வெளிநடப்பு செய்தனர். குடியரசு தலைவர் உரைக்கு மோடி பதிலளித்து வருகிறார். அப்போது, அவரை எதிர்த்து முழக்கமிட்ட கார்கேவிடம், இருக்கையில் அமர்ந்து முழக்கமிடுமாறு மோடி கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனே பிரதானம் என பாஜக கருதுவதால்தான், 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
News February 5, 2026
சபாநாயகருக்கு பின்னால் மோடி ஒளிகிறார்: பிரியங்கா

3 பெண் MP-க்கள், PM இருக்கைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததால், அவைக்கு வர மோடிக்கு துணிச்சல் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவைக்கு வராமல் சபாநாயகருக்கு பின்னால் <<19058063>>PM மோடி<<>> ஒளிந்துகொள்கிறார், இது என்ன முட்டாள்தனம் என்றும், பாஜக அரசு விவாதம் நடத்தவே விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக சுதா, ஜோதிமணி உள்ளிட்டோர் PM-ஐ முற்றுகையிட இருந்ததாக ஓம்பிர்லா சூசகமாக கூறியிருந்தார்.
News February 5, 2026
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: ஐடி

மறைந்த CM ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை HC-ல் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. ₹13 கோடி வரி பாக்கி செலுத்தக் கூறி ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜன.31 வரை வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ₹9.17 கோடி உள்ளது.


