News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 27, 2026
விமான பயணிகளுக்கு நற்செய்தி!

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் முழு பணத்தையும் திரும்பத் தர என்று DGCA அறிவுறுத்தியுள்ளது. இதற்கு உள்நாட்டு பயணிகள் குறைந்தது 7 நாள்களுக்கு முன் புக் செய்திருக்க வேண்டும். அதேபோல், வெளிநாட்டு பயணிகள் குறைந்தது 15 நாள்களுக்கு முன்பே புக் செய்திருக்க வேண்டும். மேலும், விமான நிறுவனங்கள் 14 நாள்களுக்கு பணத்தை வழங்க வேண்டும்.
News February 27, 2026
மீண்டும் போட்டியிட விருப்ப மனு: PTR

10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு மீண்டும் தனது தொழில்முறைக்கு திரும்புவேன் என்று கூறியிருந்த PTR, மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். தனது தொகுதி மக்கள் தந்த ஆதரவும், CM ஸ்டாலினின் அமைச்சரவை வாய்ப்பும் இந்த முடிவுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுவாழ்வை தொடர முடிவு செய்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதி மக்களிடம் மீண்டும் ஆதரவு கோருவேன் என்று தெரிவித்துள்ளார்.
News February 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 622 ▶குறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். ▶பொருள்: எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அறிவுடையவர்கள் மனம் தளராமல் அதை எதிர்கொள்ளும் வழியை சிந்திக்கும் போதே, அத்துன்பம் விலகிப் போய்விடும்.


