News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 7, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. அமைச்சரின் அப்டேட்!

மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் தாய், மகள், மகன் என அனைத்து தரப்புக்கும் மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருவதாக கூறினார். அதேநேரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்த பிறகு பஸ் எங்கே செல்கிறது எனக் கூட கேட்காமல் சிலர் ஏறி பயணம் செய்வதாக சர்ச்சையாக பேசியுள்ளார்.
News February 7, 2026
U-19 அணிக்கு கிடைத்த பம்பர் பரிசு.. BCCI இன்ப அதிர்ச்சி!

6வது முறையாக U-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ₹7.5 கோடி பரிசு தொகையை BCCI அறிவித்துள்ளது. பொதுவாக U-19 பிரிவினருக்கு பரிசுத் தொகை வழங்கப்படாது. ஆனால், இம்முறை இளம் வீரர்களை ஊக்குவிக்க நினைத்த BCCI, அவர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
விஜய் பக்கம் சாய்கிறார்களா? நாதக இன்று ஆலோசனை

234 தொகுதிகளிலும் நாதக சார்பில் போட்டியிட தேர்வாகியுள்ள வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பிரசார திட்டங்கள், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அடிப்படை தேவைகளின் அவசியம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்க சீமான் அறிவுறுத்தவுள்ளாராம். அதேநேரம், விஜய்யின் பக்கம் நாதக இளைஞர் படை சென்றுவிடாமல் இருக்க முக்கிய வியூகத்தையும் கூற சீமான் கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


