News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 30, 2026
ஜனவரி 30: வரலாற்றில் இன்று

1948 – நாதுராம் கோட்சேவால் தேசப்பிதா மகாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டார். 1976 – தமிழ்நாட்டில் கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. 2020 – COVID-19ஐ உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. 1950 – முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த தினம். 1874 – ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.
News January 30, 2026
பேனரை கழற்றிய போலீஸை சாடிய பிரேமலதா

பேனரை கழட்டி வைத்துவிட்டால், தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியாதா என பிரேமலதா கேள்வி எழுப்பினார். தென்காசியில் பேசிய அவர், போஸ் என பெயர் வைத்துவிட்டு, கேப்டன் கட்சியிடம் இப்படி செய்தால் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் வரும் என்றும், ஒரு சிலரின் நடவடிக்கையால் மொத்த போலீஸ் டிபார்மெண்ட்டுக்கும் கெட்டப்பெயர் என்றும் சாடினார். மேலும், பேனரை கழற்றினால் மட்டும் தேமுதிகவை அழிக்க முடியாது எனவும் கூறினார்.
News January 30, 2026
முதல் விருதால் விஷ்ணு விஷால் உருக்கம்!

’ராட்சன்’ படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருதை நடிகர் விஷ்ணு விஷால் பெற்றுள்ளார். இந்நிலையில் தனது X-ல், சினிமாவில் தான் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் அதேநாளில், எனது முதல் விருதை பெறுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்றும், தான் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


