News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 28, 2026
அரசனில் இருந்து விஜய் சேதுபதி விலகலா?

‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக செய்தி பரவி வருவது குறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார். இது வெறும் வதந்தி என தெரிவித்த அவர், இதுபோன்ற செய்திகள் எல்லாம் ஒன்று தன்னிடம் இருந்தோ, இயக்குநரிடம் இருந்தோதான் வர வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார். மக்களின் கவனத்தை பெறுவதற்காக இது போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.
News February 28, 2026
பொதுத்தேர்வு மாணவர்களே, இது உங்களுக்குத்தான்!

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில், மாணவர்கள் சந்தேகங்களை கேட்கவும், புகார் தெரிவிக்கவும் தேர்வுத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு மாணவர்களும், பொதுமக்களும் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களை களைந்து பதற்றமின்றி தேர்வு எழுதுங்கள் மாணவர்களே, ALL THE BEST..!
News February 27, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு TN அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உடனே தங்கள் கார்டை பொது ரேஷன் கார்டாக மாற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடந்த உள்ளனர். விதிகளை மீறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். SHARE IT


