News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News February 19, 2026

கலைத்துறையில் சாதனை படைத்தவருக்கு விருது!

image

திருவள்ளூர் மாவட்ட கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு 18 வயது கலை இளமணி, 19 -35 கலை வளர்மணி, 36 -50 கலை சுடர் மணி, 51-65 கலை நல் மணி, 66 கலை முத்து மணி விருதும் வழங்கப்பட உள்ளது. கரகாட்டம், சிலம்பம், பொய் கால் குதிரை, காவடி ஆட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் பிப்.26க்குள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

ரபேல் இந்தியாவை மேலும் வலிமையாக்கும்: மேக்ரான்

image

ரபேல் போர் விமானங்கள் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். 114 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவை வரவேற்ற அவர், இது இருநாடுகளின் உறவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்லும் என்றார். ரபேல் உள்நாட்டு உற்பத்தி(Make in India) அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

News February 19, 2026

திமுக கூட்டணியில் தேமுதிக.. மனவேதனையில் தமிழிசை

image

மூழ்கும் கப்பலில் கேப்டனின் தொண்டர்களை பிரேமலதா சேர்த்திருப்பதாக தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்த பிரேமலதாவுக்கு தனது அனுதாபங்கள் என்றும், இது நிச்சயமாக தேமுதிக தொண்டர்களின் விருப்பமாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனால், NDA கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும் தமிழிசை கூறினார்.

error: Content is protected !!