News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 27, 2026
வங்கி கணக்கில் பணம்.. அரசு இன்ப அதிர்ச்சி

₹1,000 அல்லது அதற்கும் குறைவான இருப்பு உள்ள செயலற்ற PF கணக்குகளில் உள்ள பணம் தானாகவே உரிய நபரின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொதுவாக ஒரு PF கணக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த புதிய பங்களிப்பும் இல்லாமல் இருந்தால், அது செயலற்றதாக கருதப்படும். அதன்படி 6,00,000-க்கும் மேற்பட்ட செயலற்ற கணக்குகளை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
News February 27, 2026
முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு

பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த அச்சத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் முட்டைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்தியா, ஜெர்மனி உள்பட 40 நாடுகளிலிருந்து கோழி மற்றும் முட்டை இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் UAE இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் சவுதியின் இந்த தடை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
News February 27, 2026
இன்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்!

கனடா பிரதமா் மாா்க் காா்னி 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது இருநாடுகளின் உறவு மேம்பாட்டுக்கான செயல்திட்டம் தொடர்பாக PM மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாட உள்ளனர்.


