News April 26, 2025
பாதுகாப்பு தோல்வியே படுகொலைக்கு காரணம்: சித்தா

நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை, போருக்கான தேவையும் இல்லை என கர்நாடக CM சித்தராமையா கூறியுள்ளார். பாதுகாப்பு தோல்வியே பஹல்காம் சம்பவத்திற்கு காரணம், எனவே பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தைவிட, பிஹார் தேர்தல் பணியே PM-க்கு முக்கியத்துவம் எனவும் விமர்சித்தார்.
Similar News
News April 26, 2025
அட! இத தெரிஞ்சுக்காமலே செத்துட்டாரே…

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரிய பிறவி குறைபாடான இது ‘triphallia’ என அழைக்கப்படுகிறது. உடல்தானம் செய்த 78 வயது முதியவரின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. ஒரு உறுப்பு மட்டும் வெளியிலும், மற்ற 2 உறுப்புகளும் விதைப்பையிலும் இருந்தன. இதை அறியாமலேயே, அந்நபர் வாழ்ந்துள்ளார் என்கின்றனர் மருத்துவர்கள்.
News April 26, 2025
இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.
News April 26, 2025
வெயில்: பகல் 11 to 3 வெளியே வர வேண்டாம்

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்