News April 9, 2024
பிரபல நிதி ஆலோசகருக்கு தடை விதித்த செபி

பொய்யான விளம்பரம் மூலம் ஈட்டிய ₹12 கோடியை திருப்பி செலுத்த வேண்டுமென பிரபல நிதி ஆலோசகர் ரவீந்திர பாலுபார்திக்கு செபி உத்தரவிட்டுள்ளது. பங்குச் சந்தையில் 1000% லாபம் ஈட்ட வழிகாட்டுவதாக பார்தி விளம்பரம் செய்துள்ளார். இதன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை அவர் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, புகாரை ஆராய்ந்த செபி பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடவும் அவருக்கு தடை விதித்துள்ளது.
Similar News
News January 26, 2026
அமெரிக்காவின் ரகசிய ஆயுதத்தை வெளியிட்ட டிரம்ப்

வெனிசுலா அதிபர் <<18758081>>மதுரோவை கைது<<>> செய்ய பயன்படுத்தப்பட்ட ரகசிய ஆயுதம் குறித்த தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். Discombobulator என்பதன் மூலமே வெனிசுலாவில் இருந்த ரஷ்ய மற்றும் சீன ஏவுகணைகளை செயலிக்க வைத்ததாகவும், இதுகுறித்து விரிவாக சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 26, 2026
வீர தீர செயலுக்கான விருதுகளை வழங்கிய CM

சென்னையில் நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு CM ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார், பீட்டர் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை கலிமுல்லா மற்றும் வேளாண்மை நலத்துறையின் சிறப்பு விருதை நாராயணசாமி நாயுடுவும் பெற்றுக்கொண்டனர்.
News January 26, 2026
ஏன் குடியரசு தினத்தில் கொடியை ஏற்றுவதில்லை?

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தை நினைவுகூரும் நாளே குடியரசு தினம். நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்றதால், <<18959128>>குடியரசு தினத்தில்<<>> கொடியை ஏற்றாமல் பறக்க விடுவார்கள். நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்ப்பார். 1929-ல், இந்திய தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதால், ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.


