News December 4, 2024
செபி அதிரடி உத்தரவு… நெருக்கடியில் அனில் அம்பானி!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். RBEP நிறுவனத்தின் சட்ட விரோதமான நிதிப் பரிமாற்ற விவகாரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், டிமேட் கணக்கு, பங்குகள் & MFகளை இணைத்து ₹26 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். எந்தப் பற்றும் அனுமதிக்கக் கூடாது. தவறும் பட்சத்தில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
நான் குற்றம் செய்யவில்லை: பி.ஆர்.பாண்டியன்

ஓஎன்ஜிசி வழக்கில் 13 ஆண்டு சிறையை <<18612508>>HC நிறுத்தி வைத்த<<>> நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்த அவர் பேசுகையில், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அந்த தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்த மறுநாள் தான் நான் அங்கு சென்றேன் என்றார்.
News December 23, 2025
விமானங்கள் வெள்ளை கலரில் இருக்க காரணம் என்ன?

➤வெள்ளை நிறம் சூரிய ஒளியை உறிஞ்சாததால், விமானம் குளிர்ச்சியாக இருக்கும் ➤மற்ற நிறங்களை போல அல்லாமல் வெள்ளையை அடிக்கடி Paint செய்யவேண்டாம். எனவே பெயிண்ட்டால் கூடும் எடையும், அதற்கான எரிபொருள் செலவும் மிச்சம் ➤வானத்திலும், தரையிலும் விமானத்தை எளிதில் காண வெள்ளை நிறம் உதவும் ➤விமானத்தில் சேதம், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நன்றாக தெரியும். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க
News December 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.


