News March 28, 2025
10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!
Similar News
News December 5, 2025
நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க
News December 5, 2025
ராசி பலன்கள் (05.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 5, 2025
பிரம்மாண்டமாக பிரகாசிக்கும் கடைசி முழுநிலவு

2025-ம் ஆண்டின் கடைசி முழுநிலவு உலகம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால், வழக்கமான முழுநிலவை விட பிரம்மாண்டமாக பிரகாசித்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களும், தங்களது போன்களில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்பிறகு 2042 வரை இவ்வளவு நெருக்கமாக நிலவை பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


