News March 28, 2025

10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

image

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!

Similar News

News March 31, 2025

LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

image

4 நாள்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 4,000 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கட்டுப்பாடுகளைத் தளர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News March 31, 2025

உலகம் போற்றும் பிரதமரை விமர்சிப்பதா? சரத்குமார்

image

உலகம் போற்றும் பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, விஜய் கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் பிரதமரை சர்வதேச தலைவர்கள் வியந்து பாராட்டி வருவதாகவும், எதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது என்பதன் உண்மை காரணத்தை அறிந்து விஜய் பேசியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

1 – 5ஆம் வகுப்பு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்

image

கோடை வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி மாணவர்களின் இறுதித் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. 1- 5ஆம் வகுப்புகளுக்கு ஏப்.7 – 17ஆம் தேதி வரை முன்கூட்டியே தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில், 1- 3ஆம் வகுப்புகளுக்கு காலை 10- 12 மணி வரையிலும், 4, 5ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 – மாலை 4 மணி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 7, 8, 9 மற்றும் 11ஆம் தேதியே தேர்வுகள் நிறைவடைகிறது.

error: Content is protected !!