News March 18, 2025
கொளுத்தும் வெயில்; சூடுபிடிக்கும் ஏசி விற்பனை…

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், வெப்பத்தை தணிப்பதற்கான வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. குளிர்பானங்கள் முதல் ஏ.சி, ஏர்கூலர், டியோடரன்டுகள் வரை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் முகத்தில் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
Similar News
News March 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
News March 19, 2025
இன்றைய (மார்ச் 19) நல்ல நேரம்

▶மார்ச் – 19 ▶பங்குனி – 05 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 19, 2025
இதுதான் எனது ஒரே இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர்

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.