News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
News February 6, 2026
திமுக ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாற்றம்: நயினார்

மதுரையில் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது நெஞ்சை உலுக்குவதாக நயினார் கூறியுள்ளார். தனது X பதிவில், CM ஸ்டாலினின் ஆட்சியில் மாணவர்கள் ரவுகளாக உருமாறுவதாகவும், இது சமூகத்திற்கே பேராபத்தானது எனவும் நயினார் விமர்சித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.
News February 6, 2026
வாயில் நெருப்பு புகைந்தால், வீட்டில் அடுப்பு புகையாது: TR

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து தனக்கே உரிய ஸ்டைலில் டி.ராஜேந்தர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். உயிருள்ள வரை உஷா ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் நான் டிரம்ஸ் அடிப்பேன் ஆனால் தம்மடிக்க மாட்டேன்; என் வாயில் நெருப்பு புகைந்தால், என் வீட்டில் அடுப்பு புகையாது எனத் தெரிவித்தார். மேலும், தம் அடிக்காத காரணத்தினால் தான் இன்றும் தம் பிடித்து பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.


