News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 12, 2026
ஆளே மாறிய அழகி பட நடிகர்.. SURPRISING PHOTOS

‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடலை இப்போது முணுமுணுத்தாலும் நமக்குள் காதல் ததும்பும். இசைக்கேற்ற நடிப்பை உயிர்ப்புடன் கொடுத்திருப்பார் இள வயது பார்த்திபனாக நடித்த சதிஷ் ஸ்டீபன். இவருடைய சமீபத்திய போட்டோஸை மேலே வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். பள்ளிப் பருவத்தில் வெட்கப்பட்ட சண்முகமா (பட கதாபாத்திர பெயர்) இது என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
News February 12, 2026
இறந்துபோன மனைவியை காட்டிக்கொடுத்த ஆதார்

இறந்ததாக கருதப்பட்ட பெண் ஒருவர், ஆதார் அட்டையை புதுப்பிக்கும்போது கிடைத்த OTP-ஆல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உ.பி.,யை சேர்ந்த சந்தீப் காணாமல் போன தனது மனைவி பிரியங்கா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால் வீட்டை விட்டு ஓடிய பிரியங்கா, ராஜஸ்தானில் வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆதார் அப்டேட்டுக்கான OTP சந்தீப்பின் மொபைலுக்கு சென்று அவரை காட்டிக்கொடுத்துள்ளது.
News February 12, 2026
நகைக் கடன்.. இந்த தகவலை நோட் பண்ணுங்க

தற்போதைய நிலவரப்படி அவ்வப்போது தங்கம் விலை குறைந்தாலும், சவரன் ₹1 லட்சத்துக்கு கீழ் செல்லவில்லை. இதனால் வங்கியில் நகைக்கடன் பெறுவோர் அதிகரித்துள்ளதாக RBI அறிக்கை தெரிவிக்கிறது. அதேநேரம், EMI முறையில் திருப்பிச் செலுத்தும்போது நிலுவையிலுள்ள கடன் தொகைக்கான வட்டி மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் எளிய வட்டி முறையில் செலுத்தும்போது அசல் தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


