News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 11, 2026
BIG NEWS: அமைச்சர் பதவியை பறிக்க CM ஸ்டாலின் முடிவு!

அமைச்சர் காந்தியின் பதவியை பறிக்க CM ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு விழாவில் நேரடியாகவே காந்தி மீது ஸ்டாலின் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தியை CM, புறக்கணித்துவிட்டு அமைச்சர்கள் நேரு, ராஜா, MP ஜெகத்ரட்சகன் உடன் குழு போட்டோ எடுத்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.
News February 11, 2026
காங்கிரஸ் அநாதையாக நிற்கும்: குஷ்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து அநாதையாக விடப்படும் என குஷ்பு கூறியுள்ளார். <<19109470>>திமுக – காங்கிரஸ்<<>> இடையேயான சலசலப்பு பற்றி கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்னைக்கு அவர்கள் டெல்லி சென்று வந்தாலும் தீர்வு கிடைக்காது என்றார். மேலும், தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால், நிச்சயம் இம்முறை NDA கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News February 11, 2026
இப்படிச் செய்தால் சிலிண்டர் வெடிக்கும்..BIG ALERT!

கேஸ் சிலிண்டர்களை எப்போதும் தரையில் சாய்த்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அதிலுள்ள கேஸ் கசிந்து, பெரும் விபத்து ஏற்படக்கூடும். எனவே, கேஸ் சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தி வையுங்கள். இப்படி செய்வதால் உள்ளே அதீத அழுத்தத்தில் இருக்கும் கேஸ், கசியாமல் இருக்கும். இத்தகவல் ஒரு குடும்பத்தின் உயிரை காக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


