News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 2, 2026
டிகிரி போதும், ₹85,000 சம்பளம்.. நாளையே கடைசி!

சென்ட்ரல் வங்கியில் 300 மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 22 – 30 ➤கல்வித்தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும் ➤தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & நேர்முக தேர்வு. ➤சம்பளம்: ₹48,480- ₹85,000 ➤பிப்.3-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News February 2, 2026
நிதியை திமுக சரியாக பயன்படுத்தல: கிருஷ்ணசாமி

லோக்சபாவில் திமுக கூட்டணியின் 40 MP-க்கள் என்ன செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடமையை செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை என்ற அவர், நிதியை TN அரசு சரியாக பயன்படுத்துவதில்லை என்றார். மேலும், கிடைக்கும் நிதியை வைத்து திட்டங்களை TN அரசு சிறப்பாக செயல்படுத்திய பிறகு, ‘நிதி போதவில்லை’ என்று கேட்டால் அதற்கு நாங்களும் குரல் கொடுக்கத் தயார் என கூறியுள்ளார்.
News February 2, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

தேமுதிகவை மதித்து எந்த கூட்டணியில் அதிக இடம் வழங்குகிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாளை(பிப்.3) கூட்டணி முடிவை தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.


