News March 29, 2025

17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

image

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.

Similar News

News December 24, 2025

முகம் காட்டாமல் உருவாகியுள்ள உலகின் முதல் படம்!

image

AI புரட்சியால் உலகமே மாறினாலும், ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி அசத்த வேண்டும் என்ற ஆர்வம் சினிமாவில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டிச.25 அன்று ரிலீஸாக உள்ள படம் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’. முகம் காட்டாமல், வசனங்களின்றி உருவான உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவர உள்ளது. பிரணிதா வாக்சவுரே நாயகியாக நடிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் மாம்புல்லி இயக்கியுள்ளார்.

News December 24, 2025

வங்கி கணக்கில் ₹10,000.. அறிவித்தது தமிழக அரசு

image

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை மறுநாளுடன் (டிச.26) நிறைவடைகிறது. உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம். SHARE IT.

News December 24, 2025

கர்ப்பிணிகள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

image

கர்ப்ப காலத்தில் தினமும் வாக்கிங் செல்வது தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும், 5,000-10,000 அடிகள் வரை நடக்க வேண்டும் என்று கூறும் டாக்டர்கள், ஒரே நேரத்தில் நடக்காமல் காலை, மதியம், இரவு என பிரித்து நடக்கலாம் என்கின்றனர். இதனால், *சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் *குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் *சுகப்பிரசவ வாய்ப்புகள் அதிகமாகும் என்கின்றனர் டாக்டர்கள்.

error: Content is protected !!