News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News March 1, 2026
முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்: PM மோடி

நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், டெல்லி AI மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் INC என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் என அர்த்தம், தற்போது அது முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக(MMC) மாறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேசப் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் பாணிலேயே காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 1, 2026
கொமேனி இறந்தாலும் தாக்குதல் தொடரும்: டிரம்ப்

மிகவும் தீய மனிதரான கொமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது ஈரான் மக்களுக்கு கிடைத்த நீதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கானது என்று SM-ல் அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஈரான் ராணுவம், போலீஸ் உள்ளிட்டோர் மக்களுடன் இணைந்து ஈரானின் நலனுக்கு ஒருசேர உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளார்.
News March 1, 2026
போர் பதற்றம்.. தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வசிக்கும் தமிழரின் நலன் காக்க, அயலகத் தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<19264571>>போர் காரணமாக<<>> இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை தமிழர்கள் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உதவி எண்களை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவிற்குள்–1800 309 3793, வெளிநாடு– +91 80 6900 9900, +91 80 6900 9901.


