News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 28, 2026
கூட்டணி முடிவு.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ், ராமதாஸ் தரப்பு பாமக, சீமானுடன் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், கூட்டணி விஷயம் தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய், ஆதாரமற்றவை என தவெகவின் துணை பொ.செ., ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனவும், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News January 28, 2026
தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <
News January 28, 2026
சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.


