News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 28, 2026
BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னை வந்துள்ள PM மோடிக்கு, ஏர்போர்ட்டில் கவர்னர் RN ரவி, EPS, தங்கம் தென்னரசு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை புதுச்சேரிக்கு சென்று அரசு விழாவில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயில் சென்று வழிபாடு நடத்திய பின், NDA பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.
News February 28, 2026
தமிழ்நாட்டின் தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

தமிழக தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாம். முன்னதாக, தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக CEC ஞானேஷ்குமார் கூறியிருந்தார். தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டார்.
News February 28, 2026
IUML கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

IUML கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன்படி, அக்கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளதாக IUML தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இப்போது 2-ஆக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


