News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 30, 2026
நுரையீரல் இன்றி 48 மணிநேரம் உயிர்பிழைத்த அதிசய மனிதர்!

நுரையீரல்கள் இல்லாமலேயே 48 மணி நேரம் ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. US-ல் 33 வயதான இளைஞரின் நுரையீரல்கள் கடும் சுவாசக் கோளாறு காரணமாக சேதமடைந்ததால், டாக்டர்கள் அதனை அகற்றினர். பின்னர் 48 மணி நேரத்திற்குப் பிறகு, உறுப்பு தானம் செய்பவர் கிடைத்ததையடுத்து, வெற்றிகரமாக அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்நபர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த நிதிஷ் குமார்

பிகாரில் அரசு ஊழியர்களின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில், பொது ஊழியர் நடத்தை (திருத்தம்) விதிகள் 2026-க்கு நிதிஷ் குமார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்குவதற்கு முன்பு தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெறவும், புனைப்பெயரில் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பது தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
ஜனவரி 30: வரலாற்றில் இன்று

1948 – நாதுராம் கோட்சேவால் தேசப்பிதா மகாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டார். 1976 – தமிழ்நாட்டில் கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. 2020 – COVID-19ஐ உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. 1950 – முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த தினம். 1874 – ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.


