News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News November 20, 2025
சற்றுமுன்: விஜய்க்கு பெரும் அதிர்ச்சி

டிச.4-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அன்றைய நாளில் தி.மலை தீபம் நடைபெறவுள்ளதால் பரப்புரைக்கு அனுமதி தர இயலாது என கூறப்பட்டுள்ளது. டிச.6 (சனிக்கிழமை) அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக, செப்.27-ல் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். விஜய் பரப்புரைக்கான இடர்கள் அகலுமா?
News November 20, 2025
வெள்ளை பட்டாணி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

புரதம், நார்ச்சத்தின் சிறந்த மூலமான வெள்ளை பட்டாணியை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. *குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. *துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, சருமத்தை மிருதுவாக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. *இரும்புச்சத்து RBC-யை அதிகரிக்கிறது.
News November 20, 2025
மார்பிங் செய்யப்பட்ட போட்டோ.. கீர்த்தி வேதனை

தனது போட்டோவை AI-ல் எடிட் செய்து பரப்பியது தன்னை வெகுவாக காயப்படுத்தியதாக நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த போது, உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்ததாகவும், அது பொய் என்பதை கண்டுபிடிக்கவே சில நிமிடங்கள் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், AI தற்போது பூதாகரமான பிரச்னையாக மாறி வருவதாகவும், மனிதர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.


