News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News December 27, 2025
கோலிய அவுட்டாக்கிட்டேன்.. விஷால் ஜெய்ஸ்வால்

VHT தொடரில் விராட் கோலியை (டெல்லி), குஜராத் அணியின் விஷால் ஜெய்ஸ்வால் ஸ்டெம்பிங் செய்து அவுட்டாக்கினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய கோலியுடன் ஒரே மைதானத்தில் விளையாடியது மட்டுமல்லாமல், அவரின் விக்கெட்டையும் எடுத்தது தான் கற்பனை கூட செய்து பார்க்காத ஒன்று என விஷால் எமோஷனலாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பை கொடுத்த விளையாட்டுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
CM ஸ்டாலினிடம் இப்படி கேட்க முடியுமா? முஃப்தி

செய்தியாளர்களை சந்தித்த J&K Ex CM மெஹபூபா முஃப்தி, காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது, உருது மொழியில் பேசுமாறு பத்திரிகையாளர் ஒருவர் வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த முஃப்தி, J&K-வில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மட்டும்தான், இதையாவது பாதுகாக்க வேண்டும் என்றார். தன்னை வேறு மொழியில் பேச சொல்லும் நீங்கள், தமிழக CM ஸ்டாலினை உருது (அ) ஆங்கிலத்தில் பேச சொல்லி கேட்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
News December 27, 2025
டிசம்பர் 27: வரலாற்றில் இன்று

*1911 – ‘ஜன கண மன’ முதன்முதலில் கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இசைக்கப்பட்டது.
*1956 – தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
*1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப் பயண கப்பலான அப்பல்லோ 8, வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
*2008 – காசா மீது மூன்று வாரத் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது.


