News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 1, 2026
OFFICIAL: சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் அறிவிப்பு

விஜய், முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். நீங்க மிஸ் பண்றீங்களா?
News February 1, 2026
விஜய்யின் பில்டப் ஓவராக உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு, EX அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்துள்ளார். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? உண்மையிலேயே White-ல் வாங்குவது எவ்வளவு? பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? என கேட்டுள்ளார். விஜய் வருமானத்தை மறைத்ததாக IT வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் பில்டப் மட்டும் ஓவராக கொடுப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார்.
News February 1, 2026
பயங்கரவாதிகள் தாக்குதல்.. 125 பேர் பலி!

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான் பகுதியில், ராணுவத்திற்கும் BLA கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 நகரங்களில் நடந்த தாக்குதலில், 18 பாதுகாப்புப் பணியாளர்களும், 15 மக்கள், 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலூசிஸ்தானுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், அதனை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


