News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 2, 2026
இன்று முதல் இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜன.2) முதல் ஜன.8-ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
News January 2, 2026
ஆதவ் அர்ஜுனா ஓடி ஒளிந்தார்: மா.சு

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஜீரோ என்ற நிலையில் உள்ளது என மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வாறு பேசுவதற்கு மா.சு.,க்கு அறிவு இருக்கா இல்லையா என ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக மா.சு.,விடம் கேட்டதற்கு, கரூரில் 41 பேர் இறந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் தன்னை அறிவாளி இல்லையென பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
News January 2, 2026
மார்கழி வெள்ளிக்கு மங்களகரமான கோலங்கள்!

குனிந்து எழுந்து கோலம் போடுவது முதுகெலும்பு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. அதேபோல வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும், செல்வத்தையும் ஈர்ப்பதாக (மகாலட்சுமி கடாட்சம்) முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சில எளிய மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை மேலே SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.


