News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 12, 2026
114 ரஃபேல் விமானங்கள் வாங்க பச்சைக்கொடி!

விமானப்படையைப் பலப்படுத்த ₹3.25 லட்சம் கோடி மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு DAC ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரும் 17-ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் 80% ரஃபேல் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்

T20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சஞ்சு சாம்சனும், சிராஜுக்கு பதில் பும்ராவும் அணியில் இணைந்துள்ளனர். முதல் போட்டியில் USA-வை வீழ்த்திய இந்தியா, கத்துக் குட்டி அணியான நமீபியாவை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 12, 2026
விடாமுயற்சி படம் போல் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

‘விடாமுயற்சி’ படத்தில் வருவதுபோல அஜர்பைஜானில் குஜராத்தைச் சேர்ந்த 2 பேர் கடத்தப்பட்டு நரக வேதனையை அனுபவித்துள்ளனர். துருவ்(22), தீபிகா(32) இருவரும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய அஜர்பைஜான் வழியாக சென்றுள்ளனர். அப்போது கடத்தல்காரர்களிடம் சிக்கிய அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இந்திய அரசின் உதவியோடு இருவரும் மீட்கப்பட்டனர்.


