News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 24, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

கடந்த 4 நாள்களாக சர்வதேச சந்தையில் உயர்ந்து வந்த தங்கம் விலையானது தற்போது மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, தற்போது, 1 அவுன்ஸ்(28g) 40 டாலர்கள் குறைந்து 5,166 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ், 2 டாலர்கள் உயர்ந்து 88 டாலர்களாக உள்ளது.
News February 24, 2026
சிறு தொழில் தொடங்க ₹20 லட்சம் வரை வழங்கும் திட்டம்

தேனா சக்தி திட்டத்தின் கீழ், சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு நிறுவனம் நடத்தும் பெண் தொழில்முனைவோருக்கு ₹20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி விகிதத்தில் 0.25% வரை சலுகை வழங்கப்படும். இந்த கடனை பெற விரும்பும் பெண்கள் சொந்தமாக தொழில் முனைவோராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் இருக்கும் Bank Of Baroda வங்கிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு SHARE THIS.
News February 24, 2026
கணவனை காதலிக்கு விற்பனை செய்த மனைவி

MP-ன் போபாலில் கணவனை, மனைவி ஒருவர் ₹1.5 கோடிக்கு அவரது காதலிக்கு விற்பனை செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அரசு அதிகாரியான 52 வயது பெண், சக ஊழியரான 42 வயது நபரை காதலித்துள்ளார். இவ்விவகாரம் கோர்ட் வரை செல்லவே, விசாரணைக்கு பிறகு குடும்ப நலன் கருதி பணத்தை பெற்றுக் கொண்டு 23 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை விட்டு கொடுத்துள்ளார். சினிமாவை விஞ்சிய இச்சம்பவம் SM-ல் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?


