News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 14, 2026
CINEMA 360°: அதிமுக ஆட்சி வந்தால் நல்லது: நடிகர் கிங்காங்

‘96’ படத்திற்கு தனக்கு Direction-க்கு கொடுத்து இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன் என்று இயக்குனர் பிரேம் குமார் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் கிங்காங் தெரிவித்துள்ளார். பழநி மலை முருகன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். ‘மக்காயலா’ மற்றும் ‘மஸ்காரா போட்டு’ பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக நடிக்கும் ‘வெகுளி’ TEASER இன்று மாலை 6.20 மணிக்கு வெளியாகிறது.
News February 14, 2026
காதலர் தினர்: லவ்வர்ஸ்களுக்கு இது எச்சரிக்கை

இந்தியாவில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது அணைத்துக்கொள்வது (PDA) வெளிப்படையாக சட்டவிரோதமல்ல என்றாலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294-ன் கீழ் ஆபாச செயலாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. “பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்” என்ற அடிப்படையில், காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்; எனினும் இது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாகும்.
News February 14, 2026
தேவைகளைக் கூச்சப்படாமல் கேளுங்கள்: பிரதீப்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தங்களுக்கான தேவைகளை கூச்சப்படாமல் கேட்க வேண்டும் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கை மிக சிறியது; நமக்கான தேவைகளை கேட்க எப்போதும் கூச்சப்படாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் தைரியமாக கேட்டு விடுங்கள்; கேட்டு மறுக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.


