News March 29, 2025

17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

image

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.

Similar News

News January 18, 2026

ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது: அன்புமணி

image

2026-ல் நடத்தப்படவுள்ள TET அட்டவணையை TRB இதுவரை வெளியிடவில்லை என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் 4 லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் TRB அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் சாடியுள்ளார். ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடாமல், எளிய பாடத்திட்டத்துடன் கூடிய சிறப்பு தேர்வை அரசு உடனடியாக அறிவிக்கவும் வலியுறுத்தினார்.

News January 18, 2026

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

image

ரேஷன் அட்டையை தொலைத்துவிட்டதால் பலரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. உங்கள் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு கிடைக்காமலிருந்தாலோ கவலை வேண்டாம். <>tnpds.gov.in<<>> கிளிக் பண்ணுங்க. அதில், செல்போன் எண், Captcha மற்றும் செல்போனுக்கு வரும் OTP-யை பதிவிடுங்கள். பின்னர், Smart Card print என்பதை அழுத்தினால், டூப்ளிகேட் கார்டு பிரிண்ட் செய்யலாம்.

News January 18, 2026

வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: CM ஸ்டாலின்

image

கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், வாசிப்பு மூலம் அறிவுத் தீ வீடுகள்தோறும் பரவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவு பரிமாற்ற நிகழ்வாகவே பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அறிவை பகிர்ந்து கொள்ளவும் TN சிறந்த மாநிலமாகும் என்றும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!