News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 8, 2026
தமிழர் பெருமையை பறைசாற்றிய மோடிக்கு நன்றி

மலேசியாவில் தமிழ் மரபை போற்றிய மோடிக்கு நயினார் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் கலாசாரம் உலகமயமானது என போற்றியதோடு, தமிழ் தான் உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. தமிழ் இலக்கியத்தின் அழியாப் பெருமையை சுட்டிக்காட்டி, மலேசியாவில் திருவள்ளுவர் கலாசாரம் மையம் விரைவில் அமைக்கவிருப்பதையும் குறிப்பிட்டிருப்பது வரவேற்பிற்குரியது என்றார்.
News February 8, 2026
RSS யாருக்கும் எதிரானது அல்ல: மோகன் பகவத்

RSS பின்னணி கொண்ட சில தனிநபர்கள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக இருந்தாலும், இந்த அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என மோகன் பகவத் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற RSS நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், RSS யாருக்கும் எதிரானது அல்ல என தெரிவித்தார். RSS சங்கத்தைப் போல செயல்படும் அமைப்பு உலகில் வேறு எங்கும் கிடையாது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
News February 8, 2026
தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள்.. அடுத்த அறிவிப்பு

அதிமுக 2 கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், விரைவில் 3-ம் கட்ட வாக்குறுதியை EPS வெளியிட உள்ளார். அதில், பொள்ளாச்சி, கும்பகோணம், ஆத்தூர், விருத்தாசலம், பழனி, சிவகாசி மாவட்டங்களுக்கான அறிவிப்பு இடம் பெற உள்ளதாம். மக்களின் நீண்டநாள் கோரிக்கை என்பதால் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுக்க உள்ளது. பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் 10-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.


