News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 15, 2026
CINEMA 360°: சஸ்பென்ஸ் வைத்துள்ள கமலின் நிறுவனம்

*வரலட்சுமி சரத்குமாரின் ‘சரஸ்வதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. *சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழுவை சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு இன்று மாலை 6.01 மணிக்கு வெளியாகிறது.
News February 15, 2026
வங்கதேச தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற BJP

வங்கதேச தேர்தலில் BJP-க்கு என்ன வேலை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் ஒரு சீட்டை வென்றது இந்தியாவைச் சேர்ந்த BJP அல்ல, Bangladesh Jatiya Party. அந்த கட்சியை சேர்ந்த ஆண்டலிவ் ரஹ்மான் என்பவர் போலா-1 தொகுதியில் 30,206 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி 209 சீட்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
News February 15, 2026
கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்மொழிகள்

*நினைத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்களுக்கு, உலகமே வழிவிடும். * வெறுப்பினால் எதையும் சாதிக்க முடியாது. அன்பினால் எதையும் வெல்ல முடியும். *காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தவர்கள் நாளை வீழ்வார்கள், இன்று வீழ்ந்தவர்கள் நாளை உயர்வார்கள். *நேரடியாகத் தாக்கும் பகையை விட, புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வஞ்சகம் மிகவும் ஆபத்தானது.


