News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. ECI முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பிப்.11-ல் தமிழகம் வரவுள்ளனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
4 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. நடிகை ரவீனா ரவி வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக சபரீஷ் மற்றும் அவரது சகோதரர் தன்னை தொந்தரவு செய்வதாக நடிகை ரவீனா ரவி பதிவிட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அநாகரீகமாக மெசேஜ்ஜின் Screenshot-ஐ பதிவிட்டு, தன்னை மட்டுமின்றி வேறு சில நடிகைகளையும் இவர்கள் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான சென்னையில் இருக்கும் இவர்கள் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 5, 2026
விஜய் என்றால் அனைவருக்கும் பயம்: செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைப்பதால்தான் தவெக உருவாக்கப்பட்டு வீரநடை போட்டு வருகிறது என KAS கூறியுள்ளார். விஜய்யிடம் இஞ்சினே இல்லை என அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த அவர், விஜய்யை பார்த்து எல்லாருக்கும் பயம் வந்துவிட்டதால்தான் இப்படிபட்ட விமர்சனம் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே பயத்தில்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை EPS வெளியிடுவதாகவும் பேசியுள்ளார்.


