News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 7, 2026
323 பணியிடங்கள்.. ₹1 லட்சம் சம்பளம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் பதவிக்காக 323 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு பயிற்சி அளிக்க கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறி தேர்வு நடத்தப்படும். சம்பளமாக ₹1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். பிப்.15-ம் தேதிக்குள் இந்த <
News February 7, 2026
பரோட்டா சாப்பிட்டால் கேன்சர் வரும்!

இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மைதா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கிய காரணம் என டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மைதா கொண்டு தயாரிக்கப்படும் பீட்சா, பரோட்டா, பர்கர் ஆகிய உணவுகளை அதிகளவு சாப்பிடுவதால் இளம்தலைமுறை பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. எனவே, பரோட்டாவை அளவாக சாப்பிடவும்.
News February 7, 2026
அக்னி 3 சோதனை வெற்றி.. இந்தியா சாதனை

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கி.மீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


