News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 21, 2026
தொகுதிப் பங்கீடு.. ரெடியானது திமுக

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே, இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்த நிலையில், முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021-ல் 3 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் எனத் தெரிவித்துள்ளது.
News February 21, 2026
பிப்.23-ல் ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல் தொடங்குகிறது. இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. <
News February 21, 2026
அதிமுகவின் தனபால் மகன் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக எம்எல்ஏவாக (அவினாசி) தனபால் உள்ள நிலையில், அவரது மகன் தவெகவில் இணைந்தது EPS மற்றும் அதிமுக மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த லோகேஷ், 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


