News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 17, 2026
மதுரை: கார் மோதி காவலாளி பரிதாப பலி

கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த ராமராஜ் (65), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் பணியை முடித்து பைக்கில் வீட்டுக்கு வந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP


