News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 28, 2026
சளி காரணமாக குரல் கரகரப்பாக இருக்கிறதா?

சளி காரணமாக உங்கள் குரல் கரகரப்பாக இருப்பதற்கோ அல்லது குரல் இழப்பிற்கோ குரல்வளை அழற்சியே காரணம். ஏனெனில், இத்தொற்றினால் குரல் நாண்கள் வீக்கமடையும். எனவே விரைவாக குணமடைய, பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதும், தேன் அருந்துவதும் வீக்கத்தைக் குறைக்கும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்வும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
News January 28, 2026
கம்பீரை நீக்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை!

டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து BCCI நீக்க வேண்டும் என இந்திய அணியின் Ex வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். மேலும், IPL வெற்றிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைப் பயிற்சியாளராக நியமிப்பது சரியல்ல என்றும், கம்பீருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த VVS லட்சுமணை தலைமைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
அம்பேத்கர் பொன்மொழிகள்

*அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். *ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். *ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை, அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். *எப்போதோ சொன்ன ஒரு கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்து கொண்டிருக்கமாட்டான்.


