News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News December 30, 2025
குமரி: நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (டிச.31) அன்று பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம்.
News December 30, 2025
மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு.. வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என <<18565227>>CM ஸ்டாலின்<<>> ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு வரு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, 1.30 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 30, 2025
பாரதியின் கனவு PM மோடியால் நிறைவேறுகிறது: CPR

ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி CPR உரையாற்றினார். அதில், தர்மத்தின்படி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாரதி கண்ட கனவு PM மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை அவர் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். காசி – ராமேஸ்வரம் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என்றும் கூறினார்.


