News March 29, 2025

17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

image

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.

Similar News

News December 31, 2025

அழகின் சிகரம் மீனாட்சி சவுத்ரி

image

மீனாட்சி சவுத்ரி, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். சேலையில் உள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பார்த்தாலே ஏதோ ஒரு ஸ்பார்க் ஆகிறது நெஞ்சுக்குள். கவனத்தை ஈர்க்கும் தோற்றம், இனிமையான சிரிப்பு, வானவில் போன்று வியக்கும் அழகு என அனைத்து உவமைகளும் சொந்தம் கொண்டாட துடிக்கும் ஓவியமாக இருக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News December 31, 2025

சீனாவை முந்தியது இந்தியா!

image

சீன கார்களை விட இந்தியாவில் தயாரித்த கார்களே இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. லைட்ஸ்டோன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அங்கு விற்கப்பட்ட மொத்த கார்களில் ஏறக்குறைய பாதி இந்தியாவில் தயாரானவை. நடப்பாண்டில் SA-ல் விற்கப்பட்ட வாகனங்களில் 49% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதே வேளையில் சீனாவில் இருந்து 17.1% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

News December 31, 2025

₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

image

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.

error: Content is protected !!