News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News December 29, 2025
மார்கழி திங்கள் ஸ்பெஷல் கோலங்கள்!

யோகா போல, கோலம் போடுவதும் உடல்நலன் காக்கும் கலைதான். குனிந்து, வளைந்து, அமர்ந்து கோலம் போடுவது ஆசனம் செய்வது போல்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போட்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்கழி திங்களன்று வீட்டு வாசலில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். Swipe செய்து பார்த்து அவற்றை வீட்டில் முயற்சிக்கவும்.
News December 29, 2025
அதிக கடனில் தமிழகம்.. புயலை கிளப்பிய காங். நிர்வாகி

இந்தியாவிலேயே TN தான் அதிக நிலுவைக்கடன் வைத்துள்ளது என காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். கடனில் இருந்த TN-ஐ வளர்ச்சியடைந்த மாநிலமாக திமுக மாற்றியதாக கனிமொழி கூறியிருந்தார். அதை X-ல் சுட்டிக்காட்டி, 2010-ல் உபி., தமிழகத்தை விட இருமடங்கு கடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது உபி.,-ஐ விட TN அதிக கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.
News December 29, 2025
பும்ரா, பாண்ட்யாவுக்கு ரெஸ்ட்? பிசிசிஐ முடிவு

நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி ஜன.3 அல்லது 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ODI தொடரில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் கொடுக்க BCCI திட்டமிட்டுள்ளது. பிப்ரவரியில் டி20 WC தொடங்கும் நிலையில், பணிச்சுமை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இருவரும் NZ எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், பாண்ட்யா VHT தொடரின் சில போட்டிகளில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.


