News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News January 11, 2026
ரேஸ் களத்தில் அனிருத்.. AK 65 காம்போ ரெடி (PHOTOS)

ரேஸ் களத்தில் தீவிரம் காட்டும் அஜித்துடன், அவ்வப்போது திரைபிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். சிம்பு, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித்துடன் இருக்கும் வீடியோக்கள் வைரலான நிலையில், அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார். இருவரும் ரேஸ் களத்தில் இருக்கும் போட்டோக்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த காம்போ எப்படி?
News January 11, 2026
இந்தியாவில் எப்போதும் இந்து PM: ஓவைசிக்கு பதிலடி!

இந்திய அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதாகவும், ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் PM ஆக வருவார் என்றும் ஓவைசி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, அரசியலமைப்பு சட்டப்படி யார் வேண்டுமானாலும் PM ஆகலாம்; ஆனால் இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்திய பிரதமர் ஒரு இந்துவாகவே இருப்பார் என்று தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 11, 2026
அண்ணாவை பார்த்து யாரும் பயப்படல: நயினார்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு சென்சார் போர்டை கையில் எடுத்திருக்கிறது என CM ஸ்டாலின் <<18812153>>கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பராசக்தி படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டு அவர்களுக்கு உள்ள விதிப்படி செயல்படுகின்றனர் எனவும் அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


