News October 21, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News March 24, 2026

கிரிக்கெட்டர் ரிங்கு சிங்கிற்கு அரசு வேலை

image

அதிரடி வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு வேலை வழங்குவதாக உ.பி., அரசு அறிவித்துள்ளது. இந்திய அணி டி20 WC வெல்ல சிறப்பான பங்களிப்பை அளித்ததை கெளரவிக்கும் விதமாக, ‘மண்டல விளையாட்டு அதிகாரி’ பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். WC-ன் போது அவரது தந்தையின் புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்தது. அந்நிலையில், தந்தையையும் கவனித்து கொண்டு, அணிக்கான பங்களிப்பையும் அளித்து ரிங்கு ரிங் வெற்றிக்கு பங்களித்தார்.

News March 24, 2026

திமுகவினரின் லாபத்திற்காக கள்ளுக்குத் தடை: சீமான்

image

தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் கள் விற்கப்படுகிறது; இங்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூரில் பரப்புரை மேற்கொண்ட சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகளின் லாபம் கெட்டுவிடும் என்பதால்தான் கள்ளுக்கு தடை விதித்துள்ளனர் என சாடிய அவர், அநீதிகளை சகித்து சகித்து அடிமையாகிவிட்டோம், துணிந்து நாதகவிற்கு வாக்களியுங்கள் மாற்றம் உண்டாகும் என்றார்.

News March 24, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

image

EX அமைச்சர் CV சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். தேர்தலில் சீட்டு விவகாரத்தில் CV சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தனது சாதியை சேர்ந்தவர்களுக்கே கட்சி பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை போலவே பலர், கட்சியில் இருந்து விலக இருப்பதாக பசுபதி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!