News October 21, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News October 22, 2025

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்

image

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி, தங்களது மகளின் புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக பகிர்ந்துள்ளனர். கடந்த 2024 செப்டம்பரில் அந்த நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போதுதான் முதல்முறையாக மகள் துவா படுகோன் சிங்கை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர். பாரம்பரிய உடையில், மழலை கொஞ்சும் சிரிப்பில் இருக்கும் துவாவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

News October 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 22, 2025

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

image

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹங்கேரியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை தங்களிடம் வழங்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

error: Content is protected !!