News January 2, 2025
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
திமுகவிலிருந்து யாரும் பேசவில்லை: செங்கோட்டையன்

தவெகவில் இணைவதற்கு முன் திமுக தரப்பில் இருந்து செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுகவில் இருந்து யாரும் என்னை சந்திக்கவில்லை, கட்சியில் சேர அழைக்கவில்லை என செங்கோட்டையன் மறுத்துள்ளார். சேகர்பாபு உடன் நான் இருப்பதை போன்ற ஒரு புகைப்படம் கிடைத்தால் காட்டுங்கள் பதிலளிக்கிறேன் எனவும் அவர் கேட்டுள்ளார்.
News November 27, 2025
பிரபல நடிகர் மரணம்… மனைவி கண்ணீர்!

நடிகர் தர்மேந்திராவின் மரணம் குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான ஹேமாமாலினி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் மரணத்தால் வாழ்க்கை வெறுமையாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தர்மேந்திரா தனக்கு கணவராக மட்டுமின்றி, நல்ல நண்பராகவும், வழிகாட்டியும் இருந்தார் என சுட்டிக்காட்டிய ஹேமமாலினி, அவரின் நினைவுகள் நிலைத்திருக்கும், அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் பதிவிட்டுள்ளார்.
News November 27, 2025
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறதா?

KAS தவெகவுக்கு சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என நயினார் கூறியுள்ளார். கட்சியிலிருந்து ஒருவர் போனால், அவருடன் சேர்ந்து வாக்குகளும் போய்விடுமா என கேட்ட அவர், அதிமுகவுக்கு தனி வாக்கு வங்கி உள்ளது, மக்கள் ஆதரவும் குறையவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், KAS-ஐ பாஜக இயக்குவதாக வரும் தகவல்கள் பொய் எனவும், அப்படியெனில் அவர் இங்குதான் வந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.


