News October 22, 2025
2 மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர், தருமபுரி மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களை பிற்பகல் 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொடர் மழை காரணமாக இன்று <<18068743>>17 மாவட்டங்களில்<<>> பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மனித உடலில் தங்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

நம் ஒவ்வொருவரது உடலிலும் தங்கம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு விசித்திரமாக தோன்றலாம்; ஆனால் அது உண்மையே. 70 கிலோ எடையுள்ள ஒரு மனித உடலில் சுமார் 0.2 மி.கி தங்கம் உள்ளது. இது ஏறக்குறைய 5 லிட்டர் ரத்தத்தில் மிக சிறிய அளவில் கரைந்துள்ளதால், இதனை தனியாக பிரிக்க முடியாது. இது மூட்டு ஆரோக்கியத்திற்கும், உடலில் ஏற்படும் மின் சமிக்ஞைகளுக்கு பெரும் துணைபுரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
குற்றச் சமூகமாக மாறிவிட்டோம்: சீமான்

TN-ல் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், குற்றச் சமூகமாக மாறிவிட்டோம் எனவும், போதை தலைவிரித்தாடுவதே குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறினார். குற்றச் சம்பவங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அதைத் தேர்வு செய்த மக்களுக்கும் பங்கு உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


