News April 27, 2025
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் நாளை (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
பாதுகாப்பு படைக்கு முழுச் சுதந்திரம்: PM மோடி அறிவிப்பு

தேவையான பதிலடி, அதற்கான தகுந்த நேரம் உள்ளிட்டவைகளுக்கு ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் உள்ளதாக PM மோடி கூறியுள்ளார். மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதி, தலைமை ஆலோசகர் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியர்களின் ரத்தம் கொதிப்படைந்துள்ளதாகவும் PM தெரிவித்திருந்தார்.
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News April 29, 2025
IPL: இளம் வீரர் முதல் வயதான வீரர் வரை

நடப்பு ஐபிஎல் தொடரின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி (14), வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரம், அதிக வயது கொண்ட வீரரான தோனியும் (43) CSK அணியில் தனது ஆற்றலை நிரூபித்து வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் 29 ஆண்டுகால வயது வித்தியாசம் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இப்படி ஒரு வயது வித்தியாசத்தை பார்க்க முடியாது.