News March 20, 2025
மசூதிகளை விட பள்ளிகளே முக்கியம்: அதிபர் அதிரடி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவின் அதிபர் இப்ராஹிமின் பதிலால் சவுதி அரேபியா அதிர்ந்து போயுள்ளது. அந்நாட்டுக்கு தாங்கள் கொடுத்த நிதியில் 200 மசூதிகளை கட்டுமாறு சவுதி அரேபியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த அதிபர் இப்ராஹிம், தங்கள் நாட்டில் ஏற்கனவே அதிக மசூதிகள் இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பள்ளிகளையும், ஹாஸ்பிடல்களையும் கட்டப் போவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 21, 2025
இந்தியாவுடன் இருக்கும் ஒரே பிரச்னை இதுதான்: டிரம்ப்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அவர், அவர்களுடன் தனக்கு இருக்கும் ஒரே பிரச்னை அதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என்று தான் நம்புவதாக கூறிய அவர், ஏப்.2 முதல் அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை, நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம் என்றார்.
News March 21, 2025
மரண படுக்கையிலும் உதவி செய்த ஹூசைனி

ரத்த புற்றுநோயால் ஹாஸ்பிடலில் மரண படுக்கையில் இருக்கும் நடிகர் ஷீகான் ஹூசைனி, தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானம் வழங்கியுள்ளார். உறுப்புதான ஏற்பாடுகளை செய்த கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய அவர், “தன் இதயத்தை” மட்டும் தனது வில்வித்தை – கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்தார்.
News March 21, 2025
IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.