News October 25, 2025
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

மருது பாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி அக்.27, 30-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி அக்.27-ல் <<18094912>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு அரசு பணி வழங்க கோரிக்கை

ஆசிய கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்த துணை கேப்டனும், கண்ணகி நகரைச் சேர்ந்தவருமான கார்த்திகாவிற்கு, அரசு பணியோடு கூடிய பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்ணகி நகரில் அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட கபடி மைதானத்தை ஏற்படுத்தி தர வேண்டும். தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 25, 2025
இந்தியாவில் மட்டுமே இருக்கும் விலங்குகள்

இந்தியா பல்வேறு வகையான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வனவிலங்குகளுக்கு தாயகமாகும். பூமியில் வேறு எங்கும் காணப்படாத வனவிலங்குகள் இந்தியாவில் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த வனவிலங்கு ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
அனைத்து கட்சி கூட்டம் நடத்துக: திருமாவளவன்

விரைவில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SIR தொடர்பாக SC-ல் விசாரணையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, தமிழகத்தில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.


