News March 31, 2025
₹800 பீஸ்-காக பறிபோன பள்ளி மாணவியின் உயிர்!

உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டத்தில் ₹800 செலுத்தாததால் 9 ஆம் வகுப்பு மாணவியை, பள்ளி நிர்வாகம் ஒரு தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. இதனால், மனமுடைந்து போன அம்மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது, தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகியோர் தனது மகளை அவமானப்படுத்தியதாக தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மனதில் கொள்ளுங்கள் மரணம் எதற்கும் முடிவல்ல!
Similar News
News April 2, 2025
சீனாவை அழைத்த வங்கதேசம்.. வடகிழக்கில் கொதிநிலை

வடகிழக்கு மாநிலங்களை லாக் செய்ய, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவர் யூனுஸ் பேசினார். இதை கண்டித்த அசாம் முதல்வர் சர்மா, வடகிழக்கு மாநிலங்களையும், பிரதான இந்தியாவையும் இணைக்க சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தை உடைக்க TMP தலைவர் மனிக்யாவும், மணிப்பூரை கண்டுக்காத அரசு, இதில் கவனம் செலுத்த காங். தலைவர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.
News April 2, 2025
USA-வில் இன்று அமல்.. இந்தியாவுக்கு பிரச்னை?

டிரம்ப் அறிவித்தபடி, USA-வில் வெளிநாட்டு இறக்குமதி பொருள்களுக்கான வரி உயர்வு இன்று முதல் அமலாகிறது. மற்ற நாடுகளில் USA இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் அதே சதவிகித வரி, USA-விலும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் கனடா, மெக்ஸிகோ நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். USA விதித்த சில நிபந்தனைகளை ஏற்றதால், இந்திய பொருட்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.
News April 2, 2025
மா சே துங் பொன்மொழிகள்

*மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை. *போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். *புரட்சி என்பது இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது. * துப்பாக்கியைக் கொண்டே உலகம் முழுவதையும் திருத்தி அமைக்கலாம். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.