News August 8, 2024

நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 10, 2025

நெல்லை: ரேசன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை கலைவதற்கும் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மனு செய்தல் உள்ளிட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 11ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

நெல்லை: ரூ.40,000த்தில் அரசு வேலை.. தேர்வு இல்லை.,

image

நெல்லை மக்களே, மாவட்ட சுகாதார சங்கத்தில் 42 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி 8th, 10th, B.Com, டிப்ளமோ, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ40,000 வரை சம்பளம் வழங்கப்படும்; இதற்கு தேர்வு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.14ம் தேதி. மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> செய்யவும்.

News October 9, 2025

நெல்லை மாநகர போலீசார் 10 பேர் இடமாற்றம்

image

நெல்லை மாநகரத்தில் பணியாற்றிய எஸ்ஐ, எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கள் உட்பட 10 காவலர்களை நெல்லை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்களில் தச்சநல்லூர் எஸ்ஐ ரமேஷ் மணிகண்டன், பாளை எஸ்எஸ்ஐ சீனிவாசன், மாநகர போக்குவரத்து எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர். புதிய பணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

error: Content is protected !!