News August 8, 2024

நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 15, 2025

நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 14, 2025

BREAKING: சந்திப்பு பேருந்து நிலையத்தில் பஸ் மோதி ஒருவர் பலி

image

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த நபரின் உடலை மீட்டு பாலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு

News October 14, 2025

நெல்லை: மாலை 4 மணி வரை மழைப்பதிவு விபரம்

image

இன்று அக்டோபர் 14 காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியின் 21 மில்லிமிட்டர் மழை பெய்தது. அம்பாசமுத்திரம் 8 மில்லி மீட்டர் பாளையங்கோட்டை 7 மில்லி மீட்டர், மணிமுத்தாறு, நாங்குநேரி தலா 2 மில்லி மீட்டர், நெல்லை 3. 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

error: Content is protected !!