News June 26, 2024

பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகள் கனிஷ்கா ராசிபுரம் அரசுப் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு சிறுவயது முதலே இதயக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை வகுப்பறையில் மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.

Similar News

News December 1, 2025

அதிமுக நிர்வாகி மரணம்: இபிஎஸ் இரங்கல்

image

புதுகை அருகே வாண்டாகோட்டையைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பொருளாளர் வி.சி.இராமைய்யா சாலை விபத்தில் பலியானார். இந்நிலையில் அவருடைய இறந்த செய்தி கேட்டு சொல்லனா துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், அவரது ஆத்மா இறைவன் திருவடி நிலையில் இளப்பார எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வி.சி.இராமைய்யா குடும்பத்திற்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.

News December 1, 2025

இரும்பு கம்பியை சொருகியது போல் வலி: திருமா உருக்கம்

image

கட்சியின் வளர்ச்சிக்காக, தாங்க முடியாத உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக முட்டி வலி, கால் வலி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் உள்ளதாக உருக்கத்துடன் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News December 1, 2025

இந்து மதத்தில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை!

image

‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ என்றவுடன், இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளது என்றே பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் கோடி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கோடி(Crore) & வகை என அர்த்தங்கள் வரும். இந்த ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ வாக்கியத்தில் வகை அர்த்தம்தான் சொல்லப்படுகிறது. 33 தேவர்கள் அதாவது, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் & பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.

error: Content is protected !!