News October 27, 2025
8-ம் வகுப்பு மாணவிக்கு கன்னித் தன்மை சான்று கேட்ட பள்ளி

உ.பி.,யின் மொரதாபாத்தில் மதரஸா சார்பில் நடத்தப்படும் பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு சேர்க்கைக்காக மாணவி ஒருவர் தாயாருடன் சென்றுள்ளார். மாணவியின் கன்னித்தன்மை சான்று அளித்தால் மட்டுமே அட்மிஷன் என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி அட்மிஷன் பொறுப்பு அதிகாரி ஷாஜஹான் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 27, 2025
இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறையாகும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். மொன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையின் ஏனாம் மாவட்டத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
காலை குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்

காலையில் உங்கள் குழந்தைகளை சில நிமிடங்கள், அவர்களது கை, கால்களை நீட்டி உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். இதற்கு எளிய யோகா ஆசனங்கள் உதவும். அவை என்னென்ன ஆசனங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, வேறு ஏதேனும் ஆசனம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News October 27, 2025
Global Roundup: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது

*பிரான்ஸ் மியூசியத்தில் கொள்ளை: இருவர் கைது.
*பாக்., PM, ராணுவ தளபதி இருவரும் சிறந்தவர்கள்: டிரம்ப்.
*US தூதரக வாயிலில் கத்தியுடன் ஒருவர் கைது.
*ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பியதாக Ex CIA அதிகாரி பேச்சு.
*தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. *அயர்லாந்தில் சுயேட்சை வேட்பாளர் கேத்தரின் கோனொலி அதிபராக தேர்வு.  


