News September 13, 2025
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும். *விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு. *சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். *கண்டனத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
Similar News
News September 13, 2025
இந்தியாவை கண்டு அஞ்சும் US: மோகன் பகவத்

இந்தியாவின் எழுச்சியை கண்டு அமெரிக்கா பயப்படுவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு ஏதாவது நேரிடுமோ என்ற அச்சத்திலேயே அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும் எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது எனவும் பேசினார்.
News September 13, 2025
செல்வம் பெருக வைக்கும் மகாலட்சுமியின் வழிபாடு!

செல்வம் பெருக மகாலட்சுமியின் அருள் வேண்டும். அதற்கென சிறப்பு வழிபாடுகளும் உள்ளது. 2 மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து, லட்சுமிக்கு ஏதாவது ஒரு பிரசாதமும் படைத்து வழிபடுங்கள். இவற்றுடன் சேர்ந்து காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை உள்ளவர்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.
News September 13, 2025
PM மோடி இன்று மணிப்பூர் பயணம்

PM மோடி இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு அவர் ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ₹1,200 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இனக்கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு PM முதல் முறையாக மணிப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது. PM வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.