News May 16, 2024
ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Similar News
News January 2, 2026
அதிமுக விருப்ப மனு மூலம் ₹15.26 கோடி

2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு ஒன்றிற்கு ₹15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், விருப்ப மனுக்கள் மூலம் அதிமுகவுக்கு ₹15.26 கோடி (15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) கிடைத்துள்ளது. குறிப்பாக, EPS போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டதன் மூலம் 3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது.
News January 2, 2026
பொங்கல் பரிசு.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை & 1 முழு கரும்பை உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பை வழங்க ₹248 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இதில் ரொக்கப் பரிசு தொடர்பான தகவல்கள் இடம்பெறாததால், பரிசுத் தொகை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பரிசுத் தொகை அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது.
News January 2, 2026
TNPSC 2026 சிலபஸில் மாற்றமில்லை

நடப்பாண்டிற்கான TNPSC தேர்வுகள், தேர்தலுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்திலிருந்தே தொடங்குகின்றன. இதற்காக தேர்வர்கள் தயாராகிவரும் நிலையில், பாடத்திட்டம் (syllabus) மாறுமோ என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடப்பாண்டிற்கான போட்டித் தேர்வுகள் நடக்கும் என TNPSC தலைவர் SK பிரபாகர் தெரிவித்துள்ளார். எனவே, தேர்வர்கள், தாங்கள் எழுதும் தேர்வுகளுக்கு ஏற்றார்போல் படிக்க தொடங்கலாம்.


