News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News November 27, 2025

EPS மீது பாஜக மேலிடம் அதிருப்தியா?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் NDA கூட்டணிக்கு பலம் அதிகரிக்கும் என பாஜக தலைமை நினைத்தது. இதனால் 0PS, டிடிவி தினகரன் போன்றவர்களை இணைக்க பாஜக முயற்சி எடுத்த போது, EPS பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் சரியும் என கணிக்கப்படுகிறது. இது EPS மீது பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

News November 27, 2025

புயல் எச்சரிக்கை: 10 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

‘டிட்வா’ புயல் எதிரொலியாக நாளை (நவ.28) திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்லில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலையில் மழை அளவை பொறுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம். இல்லையெனில், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News November 27, 2025

சீமான் மீது டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

image

சீமானின் தூண்டுதலின் பேரில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாதகவினர் அவதூறு கருத்து பதிவிட்டு வருவதாக டிஐஜி வருண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் மதுரை HC-ல் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!