News May 16, 2024
ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Similar News
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
News December 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 30, மார்கழி 15 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 30, 2025
பாஜக Ex-MLA மீதான பாலியல் வழக்கு.. மகள் வேதனை

நீதி அமைப்பு மீதிருந்த நம்பிக்கை உடைந்ததாக உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக Ex-MLA மகள் இஷிதா செங்கார் தெரிவித்துள்ளார். நீதி நிலைநாட்டப்படும் என 8 ஆண்டுகள் அமைதி காத்தேன். இதுவரை பலமுறை என்னை ரேப் செய்ய, கொல்ல வேண்டும் என மிரட்டல்கள் வந்தன. பாஜக MLA மகள் என்பதால், எனது கண்ணியம் சிதைக்கப்பட்டது. எங்கள் தரப்பு உண்மைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


