News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News November 22, 2025

அதிமுக ஒருங்கிணைப்பு; பாஜகவின் புதிய ஸ்கெட்ச்!

image

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதற்கு, EPS ஒத்துவராததால் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பழைய பிளானுக்கு பதிலாக, தற்போது பாஜக புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் சிலவற்றை பிரிந்திருப்பவர்களுக்கு வழங்கலாம் என திட்டம் இருக்கிறதாம். இதனாலேயே அதிமுகவிடம் பாஜக 50 சீட்களை கேட்கிறது எனவும் கூறுகின்றனர்.

News November 22, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

image

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

News November 22, 2025

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

image

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!