News May 16, 2024
ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Similar News
News October 21, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

NTK மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை ADMK-வில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை ADMK-வில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால், மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு, EPS புதிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.
News October 21, 2025
காதல் தோல்வியில் வலி யாருக்கு அதிகம்? ரஷ்மிகா

லவ் பிரேக்கப்பின் போது பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். காதல் தோல்வியால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார் என்பதை ஏற்க மறுத்த அவர், பெண்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். ஆண்கள் போல் தாடி வளர்க்க முடியாததால், பெண்கள் படும் அவஸ்தை மற்றவர்களுக்கு தெரிவதில்லை எனவும் பேசியுள்ளார். அவரது ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படம் நவம்பர் 7-ல் வெளியாகிறது.
News October 21, 2025
திறனற்ற திமுக அரசால் மக்கள் அவதி: எல்.முருகன்

திமுக அரசின் நிர்வாக திறன் இன்மையால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு மக்களை பெருமளவு பாதித்துள்ளதாகவும், மறுபுறம் மத்திய அரசு மக்களின் நலனுக்காக GST வரிக்குறைப்பை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.