News May 16, 2024
ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Similar News
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
News November 19, 2025
அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள்

சில புத்தகங்கள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. அவை விற்பனையையும் கடந்து உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. அவை எந்தெந்த புத்தகங்கள், எவ்வளவு விற்பனையாகி உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
Sports Roundup: SA அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு

*இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு. *முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. *வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. *100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெறவுள்ளார்.


