News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News December 25, 2025

ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முடிவு

image

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 25, 2025

திருவனந்தபுரம் பாஜக மேயர் வேட்பாளர் அறிவிப்பு

image

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக, மாநில செயலாளர் வி.வி ராஜேஷை பாஜக அறிவித்துள்ளது. அதேபோல், துணை மேயராக இளம் பெண் தலைவர் ஆஷாநாத் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 45 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியின் சகாப்தத்திற்கு முடிவுரை எழுதி, முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக (50 இடங்கள்) கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

News December 25, 2025

இந்தியாவுடன் எங்கள் உறவை அமெரிக்கா கெடுக்கிறது: சீனா

image

இந்தியாவுடனான தங்களது உறவுகளைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் பென்டகன், சீனா வேண்டுமென்றே இந்திய-அமெரிக்க நட்புக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இந்நிலையில், தங்களது எல்லைப் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என்று சீனா பதிலடி கொடுத்துள்ளது.

error: Content is protected !!