News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News November 17, 2025

காமன்வெல்த் செஸ் போட்டியில் கேரள சிறுமி சாம்பியன்

image

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் காமன்வெல்த் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான செஸ் போட்டியில் கேரளாவின் திவி பிஜேஷ் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 9 சுற்றுகள் முடிவில், 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றார். கேரளாவில் இருந்து இளம் வயதில் மாஸ்டர் டைட்டில் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் திவி பெற்றுள்ளார்.

News November 17, 2025

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

image

திருப்பதி ஏழுமலையானை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை(நவ.18) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்படுகிறது. தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளமான <>https://ttdevasthanams.ap.gov.in<<>> மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

News November 17, 2025

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!