News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News December 24, 2025

சமூக நீதியை வென்றெடுப்போம்: விஜய்

image

பெரியாரின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில், பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என அவர் கூறியுள்ளார். மேலும், சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறிய போராடியவர் பெரியார் என்றும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

News December 24, 2025

400 காலிப்பணியிடங்கள்.. உடனே முந்துங்க

image

மத்திய அரசு நிறுவனமான RITES-ல் காலியாக உள்ள 400 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கு BE, B.Tech, B.Pharm டிகிரி படிப்புடன் குறைந்தபட்ச பணி அனுபவமும் தேவை. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளமாக ₹42,478 வழங்கப்படும். <>https://rites.com<<>> என்ற தளத்தில் விண்ணப்பியுங்கள். SHARE IT

News December 24, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. அமைச்சர் அறிவிப்பு

image

<<18653603>>ஜன.6-ம் தேதிக்குள்<<>> பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்தார். அதாவது, டிச.15-ம் தேதியே மொத்த வேட்டி, சேலைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வேட்டி, சேலை விநியோக பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. SHARE IT

error: Content is protected !!