News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News December 5, 2025

புடினை இந்த காரில் PM கூட்டி சென்றது ஏன்? DECODES

image

Range Rover, Mercedes போன்ற காஸ்ட்லியான கார்கள் இருக்கையில் புடினை, PM மோடி Fortuner-ல் அழைத்து சென்றுள்ளார். Range Rover UK உடையது, benz ஜெர்மனி உடையது. உக்ரைன் போரை கண்டித்து இவ்விரு நாடுகளும் ரஷ்யா மீது அதிக வரிகளை விதித்துள்ளன. எனவேதான் PM அந்த கார்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவையும், வெளியுறவு கொள்கையையும் வெளிகாட்டுவதாக பேசப்படுகிறது.

News December 5, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: லோக்சபாவில் காரசார வாதம்

image

லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. பாஜக, மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு இணையமைச்சர் எல்.முருகன், திமுக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக விமர்சித்த நிலையில், இதற்கு திமுக MP-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

News December 5, 2025

4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி: CM ஸ்டாலின்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ₹1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி ஆலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், மின்னணு பொருள்களின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மின்னணு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 9 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!