News October 4, 2025
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News October 4, 2025
மெக்னீசியம் குறைவா இருக்கா?

மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றான மெக்னீசியம், 300-க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் குறைவாக இருந்தால், தசை வலி, சோர்வு, மன அழுத்தம், தூக்கம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உணவு, உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 4, 2025
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் வெளியானது

அசாம் பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுபின் கார்க்கின் மேனேஜரும், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான சேகர் ஜோதி கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதனை விபத்துபோல் சித்தரிக்கவே, கொலையாளிகள் வெளிநாட்டில் வைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
Thank you Captain ரோஹித் சர்மா!

ICC சாம்பியன்ஸ் டிராபி, T20 உலகக்கோப்பை என இந்திய அணியை கிரிக்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து சென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 2027 ODI உலகக்கோப்பை வென்று கொடுத்த பிறகு தான், ரோஹித் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், BCCI வேறோரு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். உங்களுக்கு பிடிச்ச கேப்டன் ரோஹித் மொமண்ட் எது?