News August 18, 2024
மோசடி குறுஞ்செய்தி: மின் வாரியம் எச்சரிக்கை

நெல்லை மின்வாரியத்தினர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.3 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதட்டப்படாமல், சைபர் குற்ற எண் 1930ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
நெல்லை: குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

களக்காடு அருகே கக்கன் நகரைச் சேர்ந்த வேல்மயில் (67) நேற்று பகலில் பொருள் வாங்க களக்காடு சென்றார். வியாசராசபுரம் அருகே குடிநீர் தாங்கி குளக்கரையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். களக்காடு போலீஸார்சம்பா இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
நெல்லை: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

பாளை பொட்டல் கரையிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தாழையூத்து நிதீஷ் குமார், கங்கைகொண்டான் சுரேஷ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் என்பவரை போலீசார் தேடிய நிலையில் அவர் விஷம் அருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலி கேரள பதிவு கொண்ட கார் கைபற்றப்பட்டது.


