News September 19, 2024
டெலிகாம் நிறுவனங்களுக்கு ‘செக்’ வைத்த SC

டெலிகாம் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட், ரூ.92,000 கோடியை செலுத்துமாறு அவற்றுக்கு 2019-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டெலிகாம் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News August 11, 2025
மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதோடை இலை போன்றவற்றில் கஷாயங்களை எடுப்பது நல்லது. SHARE IT.
News August 11, 2025
இனி படிப்பது ரொம்ப ஈசி.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!
News August 11, 2025
FLASH: விஜய்யை சந்தித்த GCC தூய்மை பணியாளர்கள்

சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்தில் விஜய்யை, தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி(GCC) தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். CPM, NTK, DMDK உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய்யை போராட்ட குழு நேரில் சந்தித்துள்ளது.