News August 2, 2024
முதல் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் SBI

2024-25 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாளை வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 முறை அதன் நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் நாளை வெளியிடப்பட உள்ள முதல் காலாண்டு முடிவுகளை, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், https://www.sbi.co.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
Similar News
News November 19, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.10 – 23- வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 – ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் <<18304177>>தேர்வு<<>> <<18304103>>அட்டவணைகள்<<>> ஏற்கெனவே <<18304206>>வெளியாகியுள்ளது<<>> குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
இந்த மாதிரி எலுமிச்சை பார்த்திருக்கீங்களா?

எலுமிச்சை, இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானத்தைத் தருகிறது. இந்த எலுமிச்சையில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? சில வகைகளை பார்க்கும்போது, இப்படியெல்லாம் எலுமிச்சை இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா.. PM-க்கு விவசாயிகள் கோரிக்கை

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு PM மோடியிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இயற்கை வேளாண் மாநாட்டில் பேசிய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர், விவசாயத்தில் புரட்சி செய்த நம்மாழ்வாருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று PM மோடியிடம் மேடையிலேயே வலியுறுத்தினர். இது, இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் செய்த நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில் அமைந்திடும் என்றும், அவர்கள் கூறினர்.


