News April 5, 2024
₹10.68 கோடி கமிஷனாக சம்பாதித்த எஸ்.பி.ஐ

தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் எஸ்.பி.ஐ வங்கி கமிஷனாக ₹10.68 கோடியை பெற்றுள்ளதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னர் 2018 முதல் 2024 வரை 30 முறை தேர்தல் பத்திரங்களை விற்கவும், அதனை ரொக்கமாக மாற்றவும் வங்கி கட்டணம், பரிவர்த்தனை கட்டணத்துடன் அதற்கான 18% ஜி.எஸ்.டியுடன், மத்திய நிதியமைச்சகத்திடம் எஸ்.பி.ஐ வசூலித்துள்ளது.
Similar News
News April 21, 2025
தொடங்கிய டிக்கெட் விற்பனை… CSK ரசிகர்கள் ஆர்வம்

சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே வரும் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி, ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
பெண்கள் முன்பு நிர்வாணம்: இளைஞர் அதிரடி கைது!

சென்னை வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச சைகையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பலர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்து தேடி வந்த நிலையில், முனுசாமி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
News April 21, 2025
முருகன் மாநாட்டில் பங்கேற்பாரா ரஜினி?

ஜூன் 22ஆம் தேதி ‘குன்றம் காக்க, கோவிலை காக்க’ என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை பங்கேற்க வைக்க இந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து, மாநாட்டிற்கான அழைப்பிதழை இந்து முன்னணி கட்சியினர் வழங்கினார். அரசியலில் இருந்து விலகினாலும், சமீப காலமாக அவரின் பேச்சுகள் அரசியலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.