News March 27, 2024
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பராமரிப்பு கட்டணம் உயர்வு

ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கி உயர்த்தவுள்ளது. கிளாசிக், சில்வர், குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.125ல் ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஜிஎஸ்டி இன்றி ரூ.75 அதிகரிக்கவுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News January 14, 2026
பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா?

இன்று வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, நம் பொங்கல் வாழ்த்துகளை சொல்லி விடுகிறோம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் என்றாலே வாழ்த்து அட்டைகள்தான். பொங்கல் காட்சிகள், நடிகர்கள், தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளை பார்த்துப் பார்த்து வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்புவோம். தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி!
News January 14, 2026
இரவு 10 மணிக்கு மேல் போனில் இதை பார்த்தால்..

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News January 14, 2026
இரவு 10 மணிக்கு மேல் போனில் இதை பார்த்தால்..

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.


