News March 13, 2025
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி <
Similar News
News March 14, 2025
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.
News March 14, 2025
பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News March 14, 2025
கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை அணுகி ஏலம் எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.