News March 25, 2025
சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 26, 2025
இபிஎஸ் கூறியது அனைத்தும் புளுகு மூட்டை: ஸ்டாலின்

நெல் கொள்முதல் விவகாரத்தில் EPS கூறியவை அனைத்தும் புளுகு மூட்டைகள் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமாக, மக்களுக்கு உறுதுணையாக எதையும் செய்ய எண்ணமில்லை என சாடிய அவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் அறுவடை செய்ய முடியுமா என EPS செயல்படுகிறார் என விமர்சித்தார். மேலும், பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

உணவு ஆர்டர் செய்யும்போது, அவை கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் டெலிவரி ஆகும். இந்த டப்பாவை கழுவி, மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கும் உள்ளது. இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய- ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளதாம்.
News October 26, 2025
வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.. தமிழக அரசு

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


