News March 25, 2025
சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 29, 2025
இரா.சுப்புராம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை <<15911227>>இரா.சுப்புராம்<<>> மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
இனி பட ஷூட்டிங்கிற்கு வந்த புதிய விதிமுறைகள்!

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது பெப்சியின் நீண்டகால கோரிக்கையாகும். இந்த மறுசீரமைப்பு விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்த் திரை ஊழியர்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்றும் சொல்கின்றனர்.
News March 29, 2025
கவுன்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆல்லைனில் ரத்து செய்யலாம்

ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை இனி ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். IRCTC இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். பின்னர், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து, தங்களின் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.