News March 13, 2025
போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு

போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டை குறைக்க ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்ததும் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இனி ஆவண நகல்களை காகிதமாக கொண்டு செல்ல வேண்டாம். முதலில் 20 தலைமை போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறகு அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் கொண்டு வரப்படவுள்ளது.
Similar News
News March 13, 2025
போஸ்ட் ஆபிஸ் ATMகளால் அவதி

அவதியடைந்துள்ளனர். போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாக எந்த ATM-ம் செயல்படவில்லை. மாற்று ATMகளில் பணம் எடுத்தால், பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மக்கள் புகாரளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பணம் நிரப்பும் ஏஜென்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணம் நிரப்பவில்லை என்றனர்.
News March 13, 2025
தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
News March 13, 2025
4 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: IMD வார்னிங்

தமிழகத்தில் இன்று அடுத்த 4 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.