News March 13, 2025
போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு

போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டை குறைக்க ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்ததும் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இனி ஆவண நகல்களை காகிதமாக கொண்டு செல்ல வேண்டாம். முதலில் 20 தலைமை போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறகு அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் கொண்டு வரப்படவுள்ளது.
Similar News
News August 5, 2025
கணவரை பிரியும் ஹன்சிகா.. சூசக அறிவிப்பு?

நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்கள் விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஹன்சிகாவின் இன்ஸ்டாவில் திருமண போட்டோஸ், சோஹைலுடன் எடுத்துக் கொண்ட எந்த ஒரு போட்டோவும் இல்லாததால், இந்த கருத்து எழுந்துள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் விவாகரத்தை இன்ஸ்டாவில் திருமண போட்டோக்களை டெலிட் செய்து தான் அறிவிக்கின்றனர்.
News August 5, 2025
திமுக பேய், அதிமுக பிசாசு.. சீமான் விமர்சனம்

திமுக, அதிமுகவை பேய், பிசாசு என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்றும் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதால், வட இந்தியர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது எனவும் கூறிய அவர், மாடுகளுக்கு மட்டுமல்ல மரங்களுக்காகவும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் இல்லம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஜூலை புரட்சி நினைவு அருங்காட்சியகம்’ என அதற்கு பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லமாக மாறுவதற்கு முன் இது ராஜ்பரி எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. வங்கதேசத்தில் பிரதமருக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்ததையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.