News April 24, 2024
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி திட்டம்

ஒபெக் கூட்டமைப்பு, வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 2025க்குள் 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6% ஆக இருக்குமென ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
Similar News
News January 2, 2026
நயன்தாராவின் செயலால் கோபத்தில் கோலிவுட்

பட விழாக்களில் ஹீரோயின்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை எனக் கூறி, கடந்த சில ஆண்டுகளாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்தின் பெரும்பாலான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார். இதனால், தமிழ் பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஓரவஞ்சனை செய்வதா என நயனுக்கு எதிராக டோலிவுட்டில் குரல்கள் எழுந்துள்ளன.
News January 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 568
▶குறள்:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
▶பொருள்: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
News January 2, 2026
₹2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக DMK அரசு கூறுவது பொய் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பேற்றது முதல் 2025 மார்ச் வரை ₹3.86 லட்சம் கோடி வாங்கியதாகவும், அதில் மூலதனச் செலவாக ₹1.66 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். RBI புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மீதமுள்ள ₹2.20 லட்சம் கோடி கடனை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக அரசு செலவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.


