News April 7, 2025
இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News December 6, 2025
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
News December 6, 2025
கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், CM ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, CM ஸ்டாலின் அணைத்துள்ளதாக அவர் கூறினார். கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News December 6, 2025
BREAKING: ஒரே நாளில் ₹25,000 வரை விலை உயர்ந்தது

நாடு முழுதும் <<18486693>>விமான டிக்கெட்களின்<<>> கட்டணம் நிர்ணயம் செய்தும் விலை குறையவில்லை. மாறாக பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – கோவைக்கு வழக்கமாக ₹5,400 ஆக இருக்கும் நிலையில், இன்று ₹57,700, நாளை ₹71,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – பெங்களூருக்கு ₹24,000 – ₹59,000 வரை அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சிக்கு ₹4,000 – ₹26,000, சென்னை – டெல்லிக்கு ₹24,000 – ₹42,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


