News March 27, 2025
சனிப்பெயர்ச்சி: குபேரன் ஆகப்போகும் ராசிகள்

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, வரும் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய மூன்று ராசியினருக்கு குபேர யோகம் அடிக்கப் போகிறது. இவர்களின் பணப் பிரச்னைகள் அனைத்தும் இந்த சனிப்பெயர்ச்சியோடு தீரும் என்று ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 22, 2025
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 22, 2025
இப்படியும் சில பிள்ளைகள்.. பெற்றோர் ஜாக்கிரதை!

ஆரணி அருகே அம்மாவின் நகைகளைத் திருடி தனது பெண் தோழிகளுக்கு செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஊர் சுற்றிவந்த +2 மாணவனின் செயலால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிலிருந்து 2.5 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது இது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பெற்றோர் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News November 22, 2025
BREAKING: கைதாகிறாரா சீமான்?

நெல்லையில் நாதகவின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், தடையை மீறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு புறப்பட்டால், சீமானை கைது செய்ய போலீசார் ரெடியாக இருக்கின்றனர். ஏற்கெனவே, நள்ளிரவில் இருந்து நாதகவினர் கைது செய்யப்படுகின்றனர்.


