News March 29, 2025
இன்று சனிப்பெயர்ச்சி: அதிக நன்மைகள் பெறும் 4 ராசிகள்

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்று (மார்ச் 29) இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இதனால் மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகள் அதிக நன்மைகள் பெறும். ரிஷபம், விருச்சிகம் இரு ராசிகளுக்கு நன்மை, தீமை இரண்டுவிதமான பலன்களும் ஏற்படலாம். அதேநேரம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன்பெறுமாம்.
Similar News
News April 1, 2025
வணிக சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. GAS விலை மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News April 1, 2025
இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து Fun செய்தனர். அப்போது முதல் ஏப்.1 உலக முட்டாள்கள் தினமானது.
News April 1, 2025
மும்மொழிக் கொள்கைக்கு 35 லட்சம் பேர் ஆதரவு

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்காக பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.