News March 29, 2025

சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏழரை சனி

image

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இன்று முதல் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறவுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும், கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் ஏழரை சனி நடைபெறவுள்ளது. 2027ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.

Similar News

News April 1, 2025

அண்ணா பொன்மொழிகள்

image

*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள். *பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம். *புகழைத் தேடி நாம் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும். *உலகின் பிளவு, குடும்பத்தில் தொடங்குகிறது. *ஊக்கத்தை கைவிடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.

News April 1, 2025

சென்னை கார் ஆலையை கைப்பற்றிய ரெனால்ட்

image

பிரான்ஸின் ரெனால்ட், ஜப்பானின் நிசானுடன் இணைந்து சென்னை ஒரகடத்தில், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா என்ற கார் உற்பத்தி ஆலையை தொடங்கின. இதில் நிசான் நிறுவனத்திற்கு சொந்தமான 51% பங்குகளை ரெனால்ட் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த ஆலை ரெனால்ட்டுக்குச் சொந்தமானதாக மாற உள்ளது. இருப்பினும், புதிய நிசான் கார் மாடல்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 1, 2025

பாலியல் வக்கிர கணவனை மாட்டிவிட்ட மனைவி

image

நாக்பூரில் பல பெண்களிடம் தவறாக நடந்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவனை, அவரது மனைவி போலீஸில் போட்டுக் கொடுத்துள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் வரவே, அவரது வாட்ஸ்அப்பை ஹேக் செய்த போது மனைவிக்கு இது தெரியவந்துள்ளது. மேலும், தனது கணவனால் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணையும் புகாரளிக்க வைத்துள்ளார். ஆபாசப் படங்களில் வருவது போல் செயல்பட சொல்லி தன்னையும் வற்புறுத்தியதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!