News March 30, 2025
ஓய்வு பெற்றார் சரத் கமல்

அர்ஜூனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், 10 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். இன்று சென்னையில் நடைபெற்ற ஸ்டார் கண்டெண்டர் போட்டித் தேர்வில் தோல்வுற்றதையடுத்து, அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்.
Similar News
News April 1, 2025
IPL: KKR-ன் மோசமான சாதனை

IPL-ல் கொல்கத்தா அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. மும்பை அணியுடனான நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம், ஒரே அணியுடன், ஒரே மைதானத்தில் பல முறை தோற்ற அணியாக KKR மாறியுள்ளது. வான்கடே மைதானத்தில் மும்பை அணியிடம் இதுவரை 10 முறை தோற்றுள்ளது. மொத்தமாக மும்பையிடம் KKR இதுவரை 24 முறை தோற்றுள்ளது. முன்னதாக இந்த சாதனையை பஞ்சாப் படைத்திருந்தது. கொல்கத்தாவில் KKR-யிடம் பஞ்சாப் அணி 9 முறை தோற்று இருந்தது.
News April 1, 2025
சிதம்பரம் தொகுதி Ex எம்.பி அ.முருகேசன் காலமானார்

சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி முருகேசன் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1977ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1980 வரை பதவியிலிருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு அவருடன் அதிமுகவுக்கு சென்ற இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாய்க் கழகமான திமுகவில் இணைந்தார். கடந்த 2024 தேர்தலில் திருமாவளவன் வெற்றிக்காகப் பெரிதும் பாடுபட்டார்.
News April 1, 2025
மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ காம்போ

நடிகர் கார்த்தி அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘கைதி 2’ உள்ளிட்ட தனது அடுத்தடுத்த கமிட்மென்ட்களை முடித்துவிட்டே கார்த்தி இப்படத்தில் இணைய உள்ளாராம்.