News April 14, 2024
சரப்ஜித் சிங் கொலை குற்றவாளி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.
Similar News
News December 13, 2025
சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News December 13, 2025
பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.
News December 13, 2025
கேரளாவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இடையே இழுபறி!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF), கேரளா ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் LDF 3 இடங்களிலும், UDF 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 87 நகராட்சிகளில் UDF-45, LDF-32, NDA-2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.


