News April 14, 2024
சரப்ஜித் சிங் கொலை குற்றவாளி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.
Similar News
News January 11, 2026
உங்களுக்கும் இப்படி போன் வரலாம்.. உஷாரா இருங்க!

இந்தூரை சேர்ந்த ஸ்கூல் டீச்சரிடம், AI மூலம் அவரின் Cousin-ன் குரலில் பேசி ₹97,500-ஐ சிலர் சுருட்டியுள்ளனர். இருவரும் 2 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாதபோதும், அவசர மருத்துவ தேவை என்பதால், QR கோடு மூலம், இவரும் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், உடனே நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. பிறகு Cousin-னிடம் பேசிய போதுதான், ஏமாற்றப்பட்டதை டீச்சர் உணர்ந்துள்ளார். உங்களுக்கு இப்படி போன் வரலாம். கவனமா இருங்க!
News January 11, 2026
பொங்கல் பரிசால் உயிர் பறிபோனது

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ஜெனிபருக்கும், அவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்த ₹3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 11, 2026
அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அன்புமணிக்கு அதிகாரமில்லை என ECI-க்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக பெயரை அன்புமணி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


