News March 10, 2025
‘தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி’

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதம் இன்று அனல் பறந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடப்பதாகவும், ஆனால், தற்போது தேர்தல் பயத்தில் மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2025
தனுஷ் – நயன்தாரா வழக்கில் அடுத்தது என்ன?

நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சி இடம்பெற்றிருந்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நெட்பிளிக்ஸ்-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தீர்ப்பு யார் பக்கம் வருமோ?
News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
News March 10, 2025
தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நாடாளுமன்றத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை அவர் வாபஸ் பெற்ற போதிலும், அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.