News August 10, 2025

அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

image

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News August 10, 2025

நேற்று அன்புமணி.. இன்று ராமதாஸ்..

image

பூம்புகாரில் இன்று மாலை 3 மணிக்கு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு சென்ற ராமதாஸ் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2025

ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

image

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.

News August 10, 2025

கன்னட திரையுலகை ஆட்டிவைக்கும் ‘கூலி’!

image

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ‘கூலி’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ப்ரீ புக்கிங்கிலேயே வெளிப்படுகிறது. கன்னட திரையுலகின் மெகா ஹிட் படமான ‘KGF 2’-வை விட பெங்களூருவில் ‘கூலி’ படத்துக்கு தான் அதிக புக்கிங் ஆகியுள்ளது. ‘கூலி’ படத்துக்கு வெறும் 37 நிமிடங்களில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. அதே நேரத்தில், KGF 2-க்கு 45 நிமிடங்களில் தான் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றன.

error: Content is protected !!