News September 21, 2024

ஊழியர்களை எச்சரித்த சாம்சங்

image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 12 நாள்களாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இருக்காது எனவும் எச்சரித்துள்ளது.

Similar News

News August 22, 2025

கபில்தேவ் பொன்மொழிகள்

image

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது.
* உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News August 22, 2025

அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

image

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

image

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.

error: Content is protected !!