News April 19, 2025
அதே ஸ்கிரிப்ட்.. RCB-யின் 18-ம் எண் சாபம்!

நேற்று PBKS அணிக்கு எதிராக, RCB-யின் தோல்வி ஒரு dejavu- ஃபீலிங்கை கொடுக்கிறது. ஏப்ரல் 18, 2008-ல் KKR அணிக்கு எதிரான மேட்ச்சில் வெறும் 82 ரன்னில் சுருண்டது RCB. அன்று கோலி 1 ரன்னில் அவுட்டாகினார். 18 வருடங்கள் கழித்து, அதே ஏப்ரல் 18-ல் நேற்றும் 95 ரன்னிலேயே RCB சுருண்டது. நேற்றும் கோலி 1 ரன் மட்டுமே அடித்தார். அதே ஸ்கிரிப்ட் வருது. கோலி ஜெர்சி நம்பர் சொல்லி தெரியவேண்டியதில்லை.
Similar News
News November 11, 2025
இரவில் கைது செய்தனர்.. விடிய விடிய விசாரணை

நாட்டை உலுக்கிய <<18254468>>டெல்லி கார் குண்டு வெடிப்பு<<>> வழக்கில் சம்பந்தப்பட்ட காரின் முதல் உரிமையாளர் சல்மானை இரவில் கைது செய்த போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவை சேர்ந்த அவர் சில வருடங்களுக்கு முன்பே காரை மற்றொருவருக்கு விற்றுள்ளார். தற்போது அந்த காரை புல்வாமா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பயன்படுத்தி வந்ததால், தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
News November 11, 2025
இளமையின் ரகசியத்தை பகிர்ந்த மஞ்சு வாரியர்

47 வயதாகும் மஞ்சு வாரியர், இப்போதும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தனது உடலமைப்பை பேணி வருகிறார். தன்னுடைய இளமையின் ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். நாள் தவறாமல் ஜிம்முக்கு செல்வதும், நடனம் ஆடுவதும் தான் உடல் ரீதியாக நான் செய்யக்கூடிய பயிற்சிகள். இது தவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். இவற்றை தவறாமல் பின்பற்றுவதால் தான் வெயிட் போடாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வது? தேஜஸ்வி

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


