News January 21, 2025
24ஆம் தேதி சலூன் கடைகள் இயங்காது

வரும் 24ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினம் முடி திருத்துதல், முகம் மழித்தல் ஆகிய சேவைகள் செய்யப்பட மாட்டாது. கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
Similar News
News March 5, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் வணிகர்களின் பிள்ளைகளுக்கு TN அரசு கல்வி நிதி வழங்கி வருகிறது. அந்த வகையில், கல்லூரி படிப்பு படிக்கும் வணிகர்களின் பிள்ளைகளுக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல், தொழில்கல்வி படிப்பவர்களுக்கு ₹10,000 வழங்கப்படுகிறது. இதில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு TN அரசு அறிவுறுத்தியுள்ளது. அருகிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் சென்று கூடுதல் விவரங்களை கேட்கலாம். SHARE
News March 5, 2026
சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதி இவர்தான்

சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் சுஷ்ருத் சென்னை HC-க்கு மாற்றப்பட்டுள்ளார். 1966-ல் ராய்பூரில் பிறந்த இவர், மத்தியப்பிரதேச HC-ல் 24 ஆண்டுகள் (1992 முதல்) வழக்கறிஞராக இருந்தார். 2018-ல் மத்தியப்பிரதேச HCன் நிரந்தர நீதிபதியாகி, 2025-ல் கேரள HC-ன் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
News March 5, 2026
கருணாநிதி டூ இன்பன் வரை.. ஸ்டாலின் பேச்சு

அன்பில் மகேஸ் இல்ல திருமண நிகழ்வில் ஸ்டாலின் பேசியது வைரலாகிறது. அதில், அன்பில், கடைசி வரை கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தார். தொடர்ந்து -அன்பில் பொய்யாமொழி தனக்கும், தற்போது அன்பில் மகேஸ், உதயநிதிக்கும் பக்கபலமாக உள்ளதாக ஸ்டாலின் கூறினார். மேலும், இந்த குடும்ப நட்பு, மகேஸ், உதயநிதியுடன் முடியப்போவதில்லை. அவர்களுடைய மகன்கள் இன்பன், இனியன் என வாழையடி வாழையாக தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.


