News March 17, 2024
இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
ரூட் 2012-ம் ஆண்டே என்னை கவர்ந்துவிட்டார்: சச்சின்

டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
News August 26, 2025
சிரஞ்சீவி அரசியலில் வீழ்ந்த கதை!

சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி.. இந்த நேரத்தில் வழிபாடு செய்யுங்க

இன்று மாலை 4.50 – 5.50 வரை அல்லது மாலை 6.30 – இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6.00 – 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். நாளை விநாயகர் சிலை வாங்கினால், மதியம் 1.35 – 2.00 மணி வரை அல்லது மாலை 6.10 மணிக்கு மேல், சுண்டல், கொழுக்கட்டை, சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபாடு செய்யலாம்.