News March 17, 2024

இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

image

தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News November 15, 2025

பிஹார் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு: வேல்முருகன்

image

உண்மையான பிஹார் மக்கள் ஓட்டுப்போட்டா பாஜகவினர் வெற்றி பெற்றார்கள் என தவாக வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்ற அவர், இதையே TN-லும் செய்ய பாஜக திட்டமிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், TN-ல் உள்ள வட இந்தியர்களுக்கு Voter ID கொடுத்ததன் மூலம், பகுத்தறிவாளிகள் வெல்ல முடியாத சூழல் உருவாகும் எனவும் கூறினார்.

News November 15, 2025

ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

image

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!