News March 17, 2024
இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம்: SA கோச்!

2-வது டெஸ்டின், 2-வது இன்னிங்ஸில் SA டிக்ளேர் செய்ய ஏன் நீண்ட நேரம் எடுத்து கொண்டது என்ற கேள்விக்கு SA கோச்சின் பதில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சுக்ரி கொன்ராட் ‘We wanted them to really grovel’ என்ற வாக்கியத்தை உபயோகித்தார். இதில் Grovel என்றால் ஊர்ந்து சென்று அடிபணிவது என பொருள் பெறும். அதாவது அவர், இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம் கூறினார். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News November 27, 2025
இவரை ரொம்ப மிஸ் பண்றோம்: CM ஸ்டாலின்

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற PM-ஐ மிஸ் செய்கிறோம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். வி.பி.சிங் தன்மீது காட்டிய அன்பை நினைவுகூர்ந்த CM, சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக வி.பி.சிங் விளங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News November 27, 2025
கம்பீர் நீக்கப்படுகிறாரா? BIG REVEAL..

தெ.ஆ., அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் கோச் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் அதனை பிசிசிஐ தற்போது மறுத்துள்ளது. கம்பீரை நீக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும், 2027 WC வரை அவரே கோச்சாக தொடர்வார் எனவும் BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியில் கம்பீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


