News April 2, 2025
மத்திய அரசில் ₹69,100 வரை சம்பளம்.. இன்றே கடைசி

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் கீழ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஒரு 133 காலிப்பணியிடங்கள் உள்ளன ✦10வது தேர்ச்சி போதும் ✦விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ✦18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ✦விளையாட்டு துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு ✦சம்பளம் தகுதிகேற்ப ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும் ✦முழு தகவலுக்கு <
Similar News
News December 3, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

2-வது ODI-ல் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(110) சதம் அடித்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து பிரீட்ஷி(68) மற்றும் டிவால்ட் பிரேவிஸ்(54) அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் SA வெற்றியை தனதாக்கியது. இருவர் சதம் அடித்தும் பந்து வீச்சு எடுபடாததால் இந்தியா தோல்வியை தழுவியது.
News December 3, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.


