News September 30, 2025
டிகிரி முடித்தால் ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News March 27, 2026
ஊட்டி கல்லூரியில் கஞ்சா; 3 மாணவர்கள் சஸ்பெண்ட்!

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதன்படி கஞ்சா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட சில மாணவர்கள் பொறி வைத்து பிடிக்கப்பட்டனர். இதையடுத்து 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடும் மாணவர்களை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த முயற்சி செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 27, 2026
விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கேஸ் தட்டுப்பாடால் காய்கறிகள் வாங்குவதை ஹோட்டல்கள் கணிசமாக குறைத்துள்ளன. அதேநேரம், விளைச்சல் அதிகரிப்பால் தக்காளியின் வரத்தும் உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது. கோயம்பேடு, ஒசூர், மதுரை, நெல்லை சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் கிலோ தக்காளி ₹20 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கு பாதி குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 27, 2026
அதிமுக கூட்டணியில் மரியாதை இல்லை: LK சுதீஷ்

திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு மரியாதை இல்லை, அதிமுக கூட்டணியில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவதாக EPS பேசியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள LK சுதீஷ், அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதாக EPS கூறுவது உண்மையில்லை எனத் தெரிவித்தார். தற்போதைய சூழலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு திருப்தியாக இருக்கிறது என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


