News December 6, 2024

₹300,00,00,000 சம்பளம்! விஜய்யை மிஞ்சிய நடிகர் யார் தெரியுமா?

image

‘புஷ்பா 2’ படத்திற்காக நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் உங்கள் புருவத்தை உயர்த்தும். விஜய்யின் சாதனையை முறியடித்து, இந்திய நடிகர்களிலேயே அதிகமாக, அல்லு அர்ஜுன் ₹300 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் ₹15 கோடியும், ரஷ்மிகா ₹10 கோடி, பகத் ஃபாசில் ₹8 கோடி, தேவி ஸ்ரீபிரசாத் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய ஸ்ரீலீலாவுக்கு ₹2 கோடி சம்பளமாம்.

Similar News

News December 16, 2025

IPL: எந்த அணியிடம் எவ்வளவு உள்ளது?

image

2026 IPL தொடருக்கான மினி ஏலம் இன்று (டிச.16) அபு தாபியில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி, எந்த வீரரை, எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்நிலையில், எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 16, 2025

ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

image

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 16, 2025

நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

image

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.

error: Content is protected !!