News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.
Similar News
News November 8, 2025
மாதம் ₹10 லட்சம் கேட்கும் ஷமியின் மனைவி

சமீபமாக விவாகரத்து பெறும்போது சிலர் கேட்கும் ஜீவனாம்ச தொகை பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்படி நெட்டிசன்களின் கேள்விகளில் சிக்கியுள்ளார் ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். அவர், ஷமி தனக்கு வழங்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது எனவும், ₹10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் வாதம் நடந்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன?
News November 8, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் Ex அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த EX தாந்தோணி நகரக் கழக செயலாளர் ரவி, துணை செயலாளர் K.மகாதேவன், வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் N.பாலாஜி ஆகியோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News November 8, 2025
Nobel Prize: முதல் முதலாக வென்றது இவர்கள் தான்!

நோபல் பரிசு, உலகளவில் பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. தனக்கு நோபல் பரிசு வேண்டும் என டிரம்ப் கேட்டதற்கும் இதுவே காரணம். ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் தான், நோபல் பரிசை நிறுவினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 1901-ல் முதலாக இந்த நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.


