News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.
Similar News
News December 23, 2025
சிவகாசியில் கட்டட தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவருக்கும் சிவகாசி மீனம்பட்டியை சாந்திக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மீனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்ற அஜித்குமார் திடீரென அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 23, 2025
10-வது போதும்.. தமிழக அரசில் ₹90,000 சம்பளம்!

✱சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் உள்ள 309 Office Assistant காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி 10-ம் வகுப்பு முதல் MBBS வரை மாறுபடுகிறது ✱ தேர்ச்சி முறை: Shortlisting of Applications, Personal Interview ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5 ✱விண்ணப்பிக்க படிவம் பெற <
News December 23, 2025
யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

சேலத்தில் டிச.29-ல் பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டவும், நடத்தவும் கட்சி தலைவரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல என்றும், அதில் எடுக்கும் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


